“மனிதன் நிலவுக்கு போயாச்சு.. இன்னும் ஏன் முட்டாளா இருக்கிங்க?” – வாசிம் அக்ரம் கடுமையான கோபம்!

0
221
Akram

கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் என்பது வேகப்பந்து வீச்சாளர்களை தயாரிக்கும் தொழிற்சாலை என்று கூறப்படும் அளவுக்கு அங்கிருந்து தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருப்பார்கள். வேகம் இருப்பதோடு அவர்களிடம் நுட்பமும் சிறப்பாக இருக்கும்.

ஆனாலும் கூட இதுவரை பாகிஸ்தானில் இருந்து வந்த வேகப்பந்துவீச்சாளர்களில் தற்பொழுது வரை முதன்மையான இடத்தில் இருக்கக்கூடியவராக பாகிஸ்தான் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் இருக்கிறார்.

- Advertisement -

குறைந்த தூரத்தில் இருந்து வந்து, பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வது, மேலும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வது, அபாயமான யார்க்கர்களை இறக்குவது என்று வாசிம் அக்ரம் ஒரு தனித்துவமான வேகப்பந்துவீச்சாளர்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்பொழுது ஆஸ்திரேலியாவில் தனது மனைவியுடன் வசித்து வரும் வாசிம் அக்ரம் கிரிக்கெட் வர்ணனை செய்வதில் தன்னை மிகவும் பிசியாக வைத்திருக்கக் கூடிய முன்னாள் வீரராக இருக்கிறார்.

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளையும் ஆஸ்திரேலியா தோற்று தொடரை இழந்து நாடு திரும்பியது.

- Advertisement -

இந்தக் குறிப்பிட்ட டெஸ்ட் தொடருக்கு கிரிக்கெட் வர்ணனையாளராக வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் இவருடன் ஸ்டீவ் வாக், ரவி சாஸ்திரி, மைக்கேல் வாகன் ஆகியோரும் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தார்கள்.

ஆஸ்திரேலியாவில் இருந்து இவர்களுடன் வாக்கிங் செல்லும் பொழுது வாசிம் அக்ரம் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் வாசிம் அக்ரம் பதிவேற்றி இருந்த புகைப்படத்தில் அவரது கையில் இடைவெளியில் இருந்த முடியை பற்றி ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் கமெண்ட் செய்திருந்தார்.

இது வாசிம் அக்ரமை கடும் கோபத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது. இதற்கு பதில் அளித்துள்ள வாசிம் அக்ரம் “உலகம் நிலவை அடைந்து விட்டது. ஆனால் என் நாட்டில் உள்ள சில முட்டாள்கள் அக்குள் முடியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது நாம் ஒரு நாடாக எங்கே இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. மேலும் நம் கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கிறது” என்று கடுமையாக கூறியிருக்கிறார்!