7 வருட ஐபிஎல் தொடரில்.. ரிஷப் பண்ட் இந்த மாதிரி செஞ்சு யாருமே பாக்கல.. ரொம்ப மோசமா இருக்காரு.. ஐபிஎல் 2025

0
234

18வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடுகின்றன.

இதில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடந்த ஏழு வருட ஐபிஎல் வரலாற்றில் இந்த ஆண்டு மோசமான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

லக்னோ டெல்லி மோதல்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க, லக்னோ அணியின் இன்னிங்சை மிச்சல் மார்ஸ் மற்றும் மார்க்ரம் ஆகியோர் களம் இறங்கி தொடங்கினார்கள். இந்த இருவர் கூட்டணி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 9.6 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தது.

இதில் தொடக்க வீரர் மார்க்கம் 33 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இது அவரது நான்காவது அரை சதமாக அமைந்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய நிக்கோலஸ் பூரான் 9 ரன்கள் வெளியேற, ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பினிஷிங் ரோலில் களம் இறங்கி விளையாடிய அப்துல் சமாத் இந்த முறை நான்காவது வரிசையில் அனுப்பப்பட்டார். இருப்பினும் அது லக்னோ அணிக்கு பலன் அளிக்கவில்லை.

- Advertisement -

ரிஷப் பண்ட் மோசமான சாதனை

8 பந்துகளை வீணடித்த நிலையில் அவர் 2 ரன் மட்டுமே எடுத்து முகேஷ் குமார் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதற்குப் பிறகாவது வருவார் என்று நினைத்த நிலையில் இடது கை பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் களம் இறங்கி 15 பந்துகளை எதிர் கொண்டு 14 ரன்கள் மட்டுமே எடுத்து அவரும் வெளியேறினார். அதன் பின் இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கிய ஆயுஸ் பதூனி 21 பந்துகளை எதிர் கொண்டு 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட களமிறங்கினார்.

இதையும் படிங்க:ஸ்டார்க்கை கண்டு பயந்தாரா ரிஷப் பண்ட்.? மோசமான முடிவால் சிக்கலில் மாட்டிய லக்னோ அணி.. LSG vs DC

இருப்பினும் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் இரண்டாவது பந்தில் முகேஷ் குமார் பந்துவீச்சில் போல்ட் ஆகி 0வில் வெளியேற, இந்த ஐபிஎல் தொடரில் 2வது முறையாக இதே டெல்லி அணிக்கு எதிராக டக் அவுட் ஆகி இருக்கிறார். கடந்த 7 வருடங்களாக இல்லாத அளவிற்கு ஒரு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் 2 முறை டக் அவுட் ஆகி வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்த சீசனில் அவருடைய பங்களிப்பு என்பது மிகவும் சுமாராக இருந்து வருகிறது. சென்னை அணிக்கு எதிராக மட்டுமே அவர் அரை சதம் அடித்த நிலையில் 0, 15, 2, 2, 21, 63, 3, 0 என்று விளையாடி இருக்கிறார்.

- Advertisement -