ரோகித் ஐபிஎல்-ல் லக்னோ அணிக்கு வருகிறாரா.. 50 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறதா? – எல்எஸ்ஜி ஓனர் பதில்

0
125
Rohit

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்குவதற்காக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் 50 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது என்கின்ற பேச்சுகளுக்கு அந்த அணியின் முதலாளி சஞ்சீவ் கோயங்கா பதில் அளித்து இருக்கிறார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதாலும், இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா உலகக்கோப்பையை வென்றிருப்பதாலும், ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வேறு ஒரு அணிக்கு கேப்டனாக செல்ல போகிறார் என்கின்ற பேச்சுகள் பரவலாக இருக்கிறது.

- Advertisement -

50 கோடி பேச்சு

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் சில அணிகள் ரோஹித் சர்மாவுக்கு 50 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்குவதற்கு தயாராக இருப்பதாக சில செய்திகள் வெளியாகின. எனவே அதில் ஒரு அணியாக லக்னோ அணி இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அந்த அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் கழட்டிவிடப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் முன்பை விட தற்பொழுது அதிரடியாக மாறி இருப்பதும், கேப்டன் குரூப்பில் அவர் கூர்மை அடைந்து வருவதும் தொடர்ந்து அவர் கேப்டனாக செயல்பட விரும்புவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது. எனவே அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியே வருவார், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்தால் சந்தை மதிப்பை அதிகரிக்க அணிகள் அவரை பெரிய விலை கொடுத்து வாங்கும் என்கின்ற பேச்சுகளில் லாஜிக் இருப்பதாக தோன்றியது.

- Advertisement -

ஒரு வீரருக்கு இவ்வளவு கோடியா?

இதுகுறித்து பதில் அளித்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறும்பொழுது “நீங்கள் எனக்கு சொல்லுங்கள்.ரோகித் சர்மா மெகா ஏலத்திற்கு வரப்போகிறாரா? இது யாருக்கும் தெரியாது. மும்பை இந்தியன் அணி அவரை வெளியே விடப் போகிறதா அல்லது தக்க வைக்க போகிறதா? என்பதும் தெரியாது.அவர் ஏலத்திற்கு வந்தால் கூட அவருக்கு 50 கோடி ரூபாயை செலவு செய்ய முடியுமா? ஒரு வீரருக்கு அவ்வளவு பணத்தை செலவு செய்தால் மற்ற 22 வீரர்களை எப்படி வாங்குவது?”

“எல்லா அணிகளும் சிறந்த வீரர் மற்றும் கேப்டனை வாங்க விரும்பு. ஆனால் இந்த ஆசைகள் எல்லாம் ஒரு குதிரை போன்றது. இது உங்களிடம் என்ன இருக்கிறது என்ன இல்லை என்பதை பற்றியது. உங்களிடம் இருப்பதை வைத்து யாரை வாங்க முடியும் முடியாது? என்பதை பற்றியது. நாங்கள் அவரை விரும்புகிறோம் அதே போல் மற்ற அணிகளும் விரும்பும். நாம் விரும்பும் எல்லோரையும் வாங்கி விட முடியாது”

இதையும் படிங்க: சொன்னதை செய்த ஷமி..திரும்பி வருவது எப்போது?.. யாருக்காகவும் பின்வாங்காத பிசிசிஐ – வெளியான தகவல்கள்

“செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்தான் இது குறித்து ஏதாவது முடிவு செய்ய முடியும். ஏனென்றால் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இன்னும் எந்த விதமான தகவல்களும் கூறப்படவில்லை. அது குறித்து எங்களுக்கும் எந்த விதமான ஐடியாவும் இல்லை.எனவே நாங்கள் இது குறித்து எதுவும் யோசிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -