ஐசிசி 9வது டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணியின் ஆட்டம் எதிர்பார்க்காத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. அந்த அணி முதல் சுற்றில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கிய ஆட்டத்தில் இன்று இந்திய அணிக்கு எதிராக நியூயார்க் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பரப்புவதற்காக ஐசிசி பெரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக நடப்பு டி20 உலக கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் நாட்டுடன் சேர்ந்து அமெரிக்காவும் நடத்துகிறது. இதன் காரணமாக அமெரிக்கா நேரடியாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
அமெரிக்காவில் கிரிக்கெட் புதிது என்கின்ற காரணத்தினால் பல கிரிக்கெட் நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து வந்த முன்னாள் வீரர்களை கொண்டும், சொற்ப அமைக்க வீரர்களைக் கொண்டும் அந்த அணி உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க அணியில் இந்திய வம்சாவளி மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியவர்களின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
தற்போது இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணியை வென்றிருக்கிறது. இதேபோல அமெரிக்க அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணியை வென்று வருகிறது. எனவே இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் போட்டி குறித்து பேசி இருக்கும் தமிழக வீரர் எல்.பாலாஜி கூறும் பொழுது “அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இது மிகப்பெரிய போட்டியாக இருக்கும். ஏனென்றால் இந்த போட்டியை 1.4 பில்லியன் மக்கள் பார்க்க இருக்கிறார்கள். எனவே தங்களுடைய பிராண்ட் கிரிக்கெட்டை காட்ட விரும்புவார்கள். அவர்கள் இயன்றதை செய்ய நினைப்பார்கள். குறிப்பிட்ட ஆட்டத்தில் சிறந்ததை வெளிப்படுத்துவார்கள்.
இதையும் படிங்க : விராட் கோலி இந்த மாதிரி இந்திய அணிக்கு வேண்டாம்.. 2 வருஷமா இதான் பிரச்சனை – மஞ்ச்ரேக்கர் பேட்டி
நாம் அமெரிக்க அணியில் இருக்கும் புலம்பெயர்ந்து வந்தவர்களை பற்றி பேசுகிறோம். அது மினி இந்திய அணி போல இருக்கிறது. நான் இரண்டு அமெரிக்க வீரர்களை சந்தித்தேன். அவர்கள் நிறைய இந்திய கிரிக்கெட் வீரர்களை பின் தொடர்ந்து வருகிறார்கள். அதிலிருந்து அவர்கள் உத்வேகம் பெறுகிறார்கள். மேலும் அந்த அணியில் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடியவர்கள் என நிறைய இருக்கிறார்கள். எனவே இந்தக் காரணத்தினால் இந்த போட்டி உணர்ச்சிவசமானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.