ஐபிஎல் தொடரில் இரண்டு விதமான மாற்றங்கள் நிச்சயம் வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் அதிரடியாகக் கூறியிருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என இலங்கை அணி இடம் இழந்து ஏமாற்றம் தந்தது.
இந்த போட்டிக்குப் பிறகு பேசி இருந்த இலங்கை அணியின் வீரர் தீக்சனா இந்தியாவில் இந்திய வீரர்கள் சிறிய மைதானத்திலும் தட்டையான ஆடுகளத்திலும் விளையாடுவதால் அவர்களால் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக பெரிய மைதானத்தில் விளையாட முடியவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் கிரிஸ் ஸ்ரீகாந்த் கூறும்போது “ஐபிஎல் தொடர் ஐசிசி ரூல் படி விளையாட பட வேண்டும். 11 வீரர்களை வைத்துதான் விளையாட வேண்டும் என்றால் அப்படித்தான் விளையாட வேண்டும். ஏதாவது ஒன்று இரண்டு சீசன் புதிதான முயற்சிகளை செய்து பார்க்கலாம். ஆனால் அதையே தொடர்ச்சியாக அனுமதிக்க கூடாது. மேலும் இதனால் இந்திய கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்கள் உருவாக மாட்டார்கள்.
அடுத்து எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் பவுண்டரி எல்லைகளை 5 மீட்டர்களாவது தூரமாக வைக்க வேண்டும். மிஸ் ஹிட் எல்லாம் சிக்ஸர்களாக சென்று கொண்டிருந்தால், பந்துவீச்சாளர்களால் என்ன செய்ய முடியும்?
மேலும் ஆடுகளத்தில் கொஞ்சமாவது ஏதாவது இருக்க வேண்டும். முழுவதுமாக பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தால் சரி வராது. ரசிகர்களுக்கு என்டர்டெயின்மென்ட் கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதுவே அதிகமாகும் பொழுது சலிப்பாகிவிடும். எனவே பவுண்டரி எல்லைகளை அதிகமாக வேண்டும். மேலும் ஆடுகளத்தை கொஞ்சம் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக கொடுக்க வேண்டும். இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 1 ஓவர் 39 ரன்.. யுவராஜ் சிங் சாதனையை உடைத்த வீரர்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புது ரெக்கார்டு
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் முன்பு போலான விறுவிறுப்பு இல்லாமல் போகிறது. காரணம்இம்பேக்ட் பிளேயர் விதியும் மேலும் பேட்டிங் செய்ய மிகச் சாதகமான ஆடுகளங்களும் விறுவிறுப்பை உறிஞ்சி விட்டன. இதன் காரணமாக பல ஐபிஎல் ரசிகர்கள் இதையெல்லாம் மாற்ற சொல்லி சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.