இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்து இருக்கிறது. இந்த நிலையில் அணி வெற்றி பெற்றதற்கான காரணங்கள் குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் இழந்தார். டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அந்த அணி பேட்டியில் மிக மோசமாக செயல்பட்டு மொத்தம் 113 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி வழக்கம்போல் தங்களது அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடி 10.3 ஓவரில் இலக்க எட்டி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்துக் கொடுத்தார்.
கடந்த ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாடவில்லை. மேலும் இந்த ஆண்டு அவரை சம்பள பட்டியலில் இருந்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இப்படியான நிலையில் திரும்ப வந்து ஐபிஎல் கோப்பையை வென்று இருப்பது சிறப்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெற்றிக்குப் பின் பேசிய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இப்பொழுது “இது மிகப்பெரியது விரிவானது! இதைத்தான் நாங்கள் வீரர்களிடம் கேட்டோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே அவர்கள் செயல்பட்டார்கள். இப்போது நாங்கள் ரசிப்பதற்கு நிறைய இருக்கிறது. நாங்கள் டாஸ் தோற்றால் கூட முதலில் பந்து வீசும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. எல்லாமே எங்கள் வழியில் சென்றது. ஹைதராபாத் விளையாடிய விதத்திற்கு பாராட்டுக்கள். இது ஒரு உயர் அழுத்த போட்டி. ஸ்டார்க் சிறப்பாக வெளிப்பட்டார். அவருடைய தனித்துவமான வேலை நெறிமுறை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
இதையும் படிங்க : என்னோட நண்பரே எங்கள முடிச்சுட்டார்.. இந்தியா கூட ஆடினா ஆதரவே இருக்காது.. இது ஓகே – பாட் கம்மின்ஸ் கருத்து
ரசல் ஒரு மந்திரக்கோல் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் பந்து வீசுவதற்காக என்னை நோக்கி பார்த்துக் கொண்டே இருக்கிறார். பெரும்பாலான ஆட்டங்களில் அவர் எங்களுக்கு திருப்புமுனையை உருவாக்கி இருக்கிறார். வெங்கடேஷ் ஐயர் எங்களுக்கு விஷயங்களை எளிதாக மாற்றினார். நான் முன்பே சொன்னது போல அனைவரும் முன்னேறினார்கள். அணியை தனித்து யாரும் அழைத்துச் செல்லவில்லை. இது எங்களுடைய கூட்டு முயற்சி. இது குறைபாடற்ற ஒரு சீசன்” என்று கூறி இருக்கிறார்.