இந்திய கிரிக்கெட்டில் ஜூனியர் விராட் கோலி என்று புகழப்படும் அளவுக்கு கேஎல்.ராகுல் மிகவும் திறமையான பேட்ஸ்மேன். ஆனாலும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் ஒரு பகுதியாகவே இருந்து வந்து பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய ஓய்வு எப்போது என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் வீரர்களுக்கும் 30 வயதுக்கு மேல் அவர்களுடைய செயல்பாடு அனுபவத்தின் காரணமாக மிகச் சிறப்பாக மாறும். தற்பொழுது ரோஹித் சர்மா வாழ்க்கையில் நாம் அதைத்தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். சச்சினுக்கும் அவருடைய கடைசி ஐந்து வருடங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
மனோதிட பிரச்சனை
பொதுவாக கேஎல்.ராகுல் பேட்டிங் ஃபார்ம் அறியும்போதெல்லாம் அவருடைய மனோதிடம் பற்றி பல கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம் செய்வார்கள். காரணம் இவரிடம் திறமைக்கு எந்தவித பஞ்சமும் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த வித பதட்டமும் இல்லாமல் தைரியமாக விளையாடுவது இவருடைய பிரச்சினையாக இருந்தது.
இப்படியான நிலையில் தான் கடந்த ஆண்டு ஆசியக்கோப்பை தொடரின் போது அறிமுக காலகட்டத்தில் வந்த கேஎல்.ராகுல் போல திரும்பி வந்தார். விக்கெட்டுகள் கைவசம் இல்லாத பொழுதும் தைரியமாக பேட்டிங் செய்தார். மேலும் அவருடைய விக்கெட் கீப்பிங் எதிர்பார்க்காத அளவுக்கு சர்வதேச தரத்தில் இருந்தது. இதெல்லாம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மீண்டும் அது குறையவே ஆரம்பித்திருக்கிறது.
ஓய்வு எப்போது?
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கடையில் தன்னுடைய ஓய்வு குறித்து பேசி இருக்கும் கேஎல்.ராகுல் கூறும் பொழுது ” நான் எந்தவித பாதுகாப்பின்மையையும் உணரவில்லை. ஆனால் எனக்கு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்று தோன்றுகிறது.எனக்கு மிக விரைவாகவே கிரிக்கெட் வாழ்க்கை முடிய போகிறது.
நீங்கள் 40 வயது வரையில் உடல் தகுதியுடன் இருந்தால் விளையாடலாம். தோனி 43வது வயதிலும் விளையாடினார். ஆனால் அது எல்லோராலும் செய்ய முடியாதது. அவர்தான் மிக அதிகபட்சமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் இதை செய்ய முடியும் சர்வதேச கிரிக்கெட்டில் இதை செய்வது மிகவும் கடினம்.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் தொடர்.. ஸ்மித் இதை செய்தே ஆகணும்.. அதை பார்க்க விரும்பறேன் – ஜஸ்டின் லாங்கர் பேட்டி
என்னுடைய 29ஆவது பிறந்தநாள் வரையில் எதுவும் தெரியவில்லை. ஆனால் என்னுடைய முப்பதாவது பிறந்தநாளில் நான் சுரங்கப்பாதையில் வெளிச்சத்தை பார்க்க ஆரம்பித்து விட்டேன். எனக்கு அங்கிருந்து ஓய்வு குறித்த எண்ணங்கள் உருவாக ஆரம்பித்து விட்டது. நான் 10 வருடம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கவலை உருவானது. நான் எப்பொழுதும் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் என்று இருந்தவன். ஆனாலும் என்னுடைய ஓய்வு வெகு தொலைவில் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.