வணிக பின்னணியில் இருந்து வரும் முதலாளிகள் சிறந்த அணியை தேர்வு செய்தாலும் கூட ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் வென்று விட முடியாது கேஎல்.ராகுல் கூறியிருக்கிறார்.
கிரிக்கெட்டை பொருத்தவரை பயிற்சியாளர்கள் கூட பெரிய அளவில் வீரர்கள் விஷயத்தில் தலையிட முடியாது. களத்தில் இறங்கி விளையாடக்கூடிய வீரர்கள்தான் முழு பொறுப்பை கொண்டிருக்கக் கூடியவர்கள். இதன் காரணமாகத்தான் கிரிக்கெட் கேப்டன் விளையாட்டாக இருக்கிறது.
சஞ்சீவ் கோயங்கா
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தோல்வி அடைந்த பொழுது அந்த அணியின் உரிமையாளர் நேராக மைதானத்திற்கு வந்து கேப்டன் கேஎல்.ராகுல் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையான விஷயமாக மாறியது.
இதற்குப் பிறகு அவர் தன்னுடைய வீட்டிற்கு வர வைத்து கேஎல்.ராகுலுக்கு விருந்து கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே சமயத்தில் ஐபிஎல் முதலாளிகள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களின் திட்டங்களின் தலையிடுவது வெற்றி தோல்வி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்துவது சரியானதாக இருக்காது என வெளியில் கருத்துக்கள் பரவியது.
வணிக முதலாளிகளால் வெல்ல முடியாது
இந்த நிலையில் லக்னோ அணியை விட்டு கே எல் ராகுல் வெளியேற இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் ஐபிஎல் முதலாளிகளால் போட்டியை வெல்வதற்கான உத்தரவாதத்தை கொடுக்க முடியாத என வெளிப்படையாகவே கே.எல்.ராகுல் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : பாபர் பயிற்சியில ரன் அடிப்பாரு.. அந்த 2 பேர் பையை கட்டி வீட்டுக்கு அனுப்புங்க – பாக் பசித் அலி பேச்சு
இதுகுறித்து கே.எல்.ராகுல் கூறும் பொழுது “வணிகப் பின்னணியில் இருந்து வரும் ஐபிஎல் முதலாளிகள் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எவ்வளவு சிறந்த வீரர்களை வாங்கி ஒரு அணியை உருவாக்கினாலும் கூட, எல்லா போட்டிகளையும் வெல்லும் உத்திரவாதத்தை அவர்களால் கொடுக்க முடியாது. ஒரு தனிப்பட்ட வீரருக்கு ஒரு குறிப்பிட்ட ஆண்டு மோசமானதாக இருக்கலாம். அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரராக சிறப்பாக விளையாட முடியாது” என்று கூறி இருக்கிறார்.