பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த அணி மீது தற்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல் தற்போதைய பாகிஸ்தான் அணியின் மீது தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக முக்கிய வீரர்களுள் ஒருவரை இரண்டு ஆண்டுகளுக்கு அணியில் சேர்க்க மாட்டேன் எனவும் கூறியிருக்கிறார்.
வங்கதேசம் போன்ற வளர்ந்த நாடுகள் டி20 அல்லது ஒரு நாள் போட்டிகளில் ஏதேனும் ஆச்சரியம் அளிக்கும். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது முன்னணி அணியே பெரும்பாலும் வளர்ந்த அணிகளை வெற்றி பெற்று தர வரிசையில் மேலே வரும். இந்த சூழ்நிலையில் முன்னணி அணியான பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அடைந்திருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக அணியின் தோல்விக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பெரிதும் காரணமாக அமைந்திருக்கின்றனர். அதிலும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் சயீம் அயூப் இரண்டாவது டெஸ்டில் அரை சதம் அடித்த நிலையில், ஆட்டத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லாமல் ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றப்பட்டார். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆன கம்ரான் அக்மல் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது “தற்போது அணியில் விளையாடி வரும் வீரர்களுக்கு அதிக அளவில் ஆதரவு கிடைக்கிறது என்று நினைக்கிறேன். உண்மையாக நான் பாகிஸ்தான் அணியில் ஏதேனும் ஒரு பொறுப்பில் இருந்தால் 50 ரன்கள் எடுத்த நிலையில் சயீம் ஸ்டம்பிங் வெளியேறிய பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை கூட அவரை அணிக்கு அருகில் அவரை விட மாட்டேன். இதை நான் சத்தியமாக கூறுகிறேன்.
மேலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அப்துல்லா ஷபீக் ஒரே ஸ்பெஷலிஸ்ட் துவக்க ஆட்டக்காரர். முதல் பந்தாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தற்போதைய கிரிக்கெட் ரன்கள் எதிர் பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது. எங்களது அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது என்பதை நீங்கள் பார்க்கலாம். நாங்கள் 90கள் அல்லது 80களில் விளையாடும் கிரிக்கெட்டை விளையாடவில்லை. நேரத்தை வீணடிப்பதும் பந்துகளை மட்டுமே பார்ப்பதும் ரன்களை பெறாது.
இதையும் படிங்க:48/6.. ஸ்ரேயாஸ் படிக்கல் சொதப்பல்.. பேட்டிங்கில் தனியாளாய் அக்சர் படேல் கலக்கல்.. ருதுராஜ் அணி சிறப்பான பவுலிங்.. துலீப் டிராபி 2024
அப்துல்லா போன்ற ஒரு ஸ்பெஷலிஸ்ட் வீரர் இது போன்று விளையாடினால் அது பாகிஸ்தான் அணிக்கும் சரி, அவருக்கும் சரி நன்மையை அளிக்காது என்று கூறியிருக்கிறார்.