2024 ஆம் ஆண்டு துலீப் டிராபி இன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் ருதுராஜ் தலைமை தாங்கும் இந்தியா சி அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்கும் இந்தியா டி அணியும் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அடுத்தடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர்கள் இருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் தயாராக இந்த முடிவை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எடுத்து இருப்பதாக தெரிகிறது.
ருதுராஜ் அணியின் பந்து வீச்சு கலக்கல்
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. ருதுராஜ் சி அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. இந்தியா டி அணி 48 ரன்களுக்கு ஆறு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தது.
இந்தியா டி அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அதர்வா டைடே 4, யாஸ் துபே 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 பந்தில் 9 ரன், தேவ்தத் படிக்கல் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றம் தந்தார்கள்.
அக்சர் படேல் ஒன் மேன் ஷோ
இந்த சூழ்நிலையில் அணி இக்கட்டான நிலைமையில் இருந்த பொழுது நட்சத்திர வீரர் அக்சர் படேல் சுழல் பந்துவீச்சாளர்கள் வர ஆரம்பித்ததும் தனது அதிரடியை ஆரம்பித்தார். அர்ஸ்தீப் சிங் உடன் இணைந்து அதிரடி அரைசத பார்ட்னர்ஷிப்பையும் கொண்டு வந்தார். அர்ஸ்தீப் சிங் 33 பந்துகள் தாக்குப்பிடித்து விளையாடி 13 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : வேற மாதிரி.. கேப்டன் கில் பிடித்த அசத்தல் கேட்ச்.. பரிதாபமாக வெளியேறிய ரிஷப் பண்ட்.. துலீப் டிராபி 2024
அக்சர் படேல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி கடைசி விக்கெட்டாக 118 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் ஒன் மேன் ஷோ காட்டி 86 ரன்கள் குவித்து வெளியேறினார். இந்தியா டி அணி 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. இந்தியா சி அணியின் தரப்பில் பந்துவீச்சில் விஜயகுமார் வைசாக் 3, அன்சுல் காம்போஜ் மற்றும் ஹிம்மனசு சவுகான் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.