பங்களாதேஷ் அணி தற்பொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் சொன்னது பந்துவீச்சாளர் அப்ரார் அகமதுவை நீக்கியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தான அணியில் முதலில் சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது இடம்பெற்றிருந்தார். பின்பு பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி இணைந்த பிறகு அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
வலதுகை இளம் சுழல் பந்துவீச்சாளரான அப்ரார் அகமது பந்தை கணிப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. இதுவரையில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் இரண்டு முறை 5 விக்கெட் ஒரு முறை 10 விக்கெட் என மொத்தம் 38 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் ஷாகின் அப்ரிடி அணிக்கு வந்ததும் அணியில் இருந்த ஒரே சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது நீக்கப்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாகப் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லஸ்பி ஆஸ்திரேலியா கிரிக்கெட் மனநிலையுடன் நடந்து கொள்கிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறும் பொழுது ” ஜேசன் கில்லஸ்பியின் ஆஸ்திரேலியா மனநிலை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் ஆஸ்திரேலியா அணி சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் இல்லாமல் விளையாடுமா? இல்லை இந்தியா ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவர் இல்லாமல் விளையாடுமா?
நிச்சயமாக இந்தியா ஆஸ்திரேலியா தங்களது பிரதான சுழல் பந்துவீச்சாளர்களை குறிப்பாக உள்நாட்டில் சேர்த்துக் கொள்ளாமல் விளையாட மாட்டார்கள். உங்களுக்கு அப்ரார் அகமது இருந்தார். ஆனால் நீங்கள் அந்த நம்பிக்கையை மூடி விட்டீர்கள்.
இதையும் படிங்க : ரோகித் பாய் ஒன்னு சொல்லி இருக்காரு.. விராட் பாய் எனக்கு சொன்னத செஞ்சிருக்காரு – யாஸ் தயால் பேட்டி
உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் அந்த சிறுவன் பாழாகி விட்டான். மைதானத்திற்கு வெளியே அவனுடைய பழக்கம் மற்றும் அவனுடைய உடல் தகுதி என்று பல காரணங்கள் கூறப்படுகிறது. இப்படி நீங்கள் அந்தப் பையனை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு தீமையை உண்டாக்கி விட்டீர்கள்” என்று கூறி இருக்கிறார்.