2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு 15 விக்கெட் கைப்பற்றி அந்த அணிக்கு அதிக விக்கெட் பற்றிய பந்துவீச்சாளராக இடதுகை வேகப் பந்துவீச்சாளர் யாஸ் தயால் இருந்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய சூப்பர் ஸ்டார்கள் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி இருவரும் தனக்கு என்ன கூறியிருக்கிறார்கள்? என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி, ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் தொடர்ந்து விளாச இவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது. இதற்கடுத்து 2024 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு வந்து சிறப்பான முறையில் செயல்பட்டு மீண்டு வந்திருக்கிறார்.
மேலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களை தேடி வருகிறது. தற்போது அர்ஸ்தீப் சிங் மற்றும் கலீல் அகமது இருவரும் இதற்கானஇந்திய செலக்டர்ஸ் ரேடாரில் இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளில் இடம் பெறுகிறார்கள்.
அதே சமயத்தில் கிரிக்கெட் வல்லுனர்கள் யார் தயால் இந்த இடத்தில் சரியாகப் பொருந்தக்கூடிய இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இருப்பார் என்றும், கூடிய விரைவில் அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாவார் என்றும் கூறி வருகிறார்கள். பந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்வதும் தேவைக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீச முடிவதும் இவருடைய பலமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து யாஸ் தயால் பேசும் பொழுது “ஐபிஎல் தொடரின் போது நான் ரோகித் சர்மா பாய் உடன் எந்தவித தொடர்பையும் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே நான் ஒரு சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் நெட் பவுலராக இருந்தேன். அப்போது அவருடன் நான் நிறைய பேசினேன். அப்பொழுது ரோகித் சர்மா பாய் இயல்பாகவே கடினமாக உழைக்க வேண்டும் என்றும், அப்படி செய்யும் பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : டிஎன்பிஎல் மாதிரியான வீரர்களுக்கு.. ஐபிஎல்-ல் பெரிய சம்பளம் தராதிங்க.. காரணம் இதுதான் – கவாஸ்கர் விமர்சனம்
நான் ஆர்சிபி அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது விராட் கோலி எனக்கு என்ன கூறினார் என்றால் என்னை சீசன் முழுவதும் சப்போர்ட் செய்வார்கள் என்றும், மேலும் நான் ஒரு வெளி ஆளாக எப்பொழுதும் உணரமாட்டேன் என்றும், அந்த அளவிற்கு சூழ்நிலை சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே மொத்த அணியும் என்னை முழு சீசனும் ஆதரித்தது. அதேபோல் சீனியர் வீரர்கள் அணிக்கு நான் புதியவன் போலவே நடத்தவில்லை. மேலும் சிலர் சொல்வது போல விராட் கோலி பாய் கிடையாது. அவர் பழகுவதற்கு மிகவும் நல்லவர்” என்று கூறி இருக்கிறார்