தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜாண்டி ரோட்ஸ் உலக மக்களால் அறியப்படும் ஒரு மிகச் சிறந்த பீல்டர். தற்போது ஐபிஎல்லில் லக்னோ அணியின் பயிற்சியாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா டி20 உலக கோப்பையை வென்றது குறித்து தனது கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதி போட்டி அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இந்த போட்டியின் இறுதியில் டேவிட் மில்லர் அடித்த கேட்சை சூரியகுமார் யாதவ் அற்புதமாக கேட்ச் பிடித்து இந்தியா டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைக்க காரணமாக அமைந்தார். மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்பதை தாண்டி பீல்டிங் ஒரு அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இது உணர்த்தியது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான மிகச் சிறந்த ஃபீல்டர் ஜாண்டி ரோட்ஸ் சமீபத்தில் இந்தியாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் செயல்பட்ட விதம் குறித்தும், கேட்ச்கள் மூலமாக போட்டி மாறுவது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆட்டத்தை மாற்றி அமைக்கக்கூடிய செயலைச் செய்யும் எனது வீரர்களையும், எதிரணியையும் நான் எப்போதும் மதிக்கிறேன். அந்த பந்து சிக்ஸருக்கு சென்று இருந்தாலும் டேவிட் மில்லர் போட்டியை வெற்றிகரமாக முடித்து இருப்பார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனால் டி20 கிரிக்கெட் போட்டிகள் கேட்ச்களால் வெற்றி பெற முடியும் என்பது இது காட்டுகிறது. ஆனால் அணிகள் நெருக்கமாக இருக்கும் போது ஒரு விஷயத்தை காட்டுகிறது.
இந்திய அணிக்கு இது மிகச் சிறந்த தொடராக அமைந்திருந்தது. தென்னாப்பிரிக்கா தனது வழியில் இறுதிவரை போராடியது. ஆனால் தென்னாப்பிரிக்கா மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால் உண்மையான போராளிகள் என்று காட்டியிருக்கிறார்கள். இந்தியா அவர்கள் விளையாடிய விதத்தில் அதிகம் செலுத்தியது. அந்த பந்து இரண்டு மீட்டர் தொலைவில் இருந்திருந்தால் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆட்டம் சாதகமாக மாறி இருக்கும்.
இதையும் படிங்க: சச்சின் சாதனைக்கு முன்பாக.. டிராவிட் வரலாற்று சாதனையை முறியடிக்க போகும் ஜோ ரூட்.. முதல் இங்கிலாந்து வீரராக சாதனை
எனக்கு அப்போது அந்த உணர்வு ஒரு கலவையானதாக இருந்தது. ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், இந்தியாவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் அந்த உணர்வு எனக்கு கலவையான உணர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக ஆட்டத்தை மாற்றிய தருணமாக அந்த கேட்ச் ஒரு நல்ல ஃபீல்டிங்காக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்று ஜாண்டி ரோட்ஸ் கூறியிருக்கிறார்.