மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜான்டி ரோட்ஸ் ரோகித் சர்மாவின் பேட்டிங் டெக்னிக் சுமாரானதாக இருந்தாலும் ஏன் அவர் சிறப்பானவராக இருக்கிறார்? என்று பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டில் இருக்கும் வீரர்கள் ரோகித் சர்மாவிடம் இருக்கும் பேட்டிங் டைமிங் உலகத்தில் யாரிடமும் கிடையாது என்று புகழ்ந்து கூறுவார்கள். அவரால் பந்தை எவ்வளவு வர விட்டும் விளையாட முடியும், அதே சமயத்தில் பந்தை உடம்புக்கு வெளியிலேயே வைத்து அடிக்கவும் முடியும். அந்த அளவிற்கு ஒரு பந்தை ஆடுவதற்கான நேரம் அவரிடம் இருக்கும்.
ரோகித் சர்மா பேட்டிங் டெக்னிக் சுமாரானது
இப்படியான நிலையில் ரோஹித் சர்மா பேட்டிங் டெக்னிக் சுமாரானது என முன்னாள் மும்பை இந்தியன்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் வெளிப்படையாக கூடி இருக்கிறார். அதே சமயத்தில் அவர் ஏன் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார் என்கின்ற காரணத்தையும் விளக்கி இருக்கிறார்.
இது குறித்து ஜான்டி ரோட்ஸ் கூறும் பொழுது “ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வெளியேறும் பொழுது நான் அவருடைய நடையை கற்பனை செய்து பார்க்கிறேன். அவர் வலைப்பயிற்சியில் சில த்ரோ டவுன் பந்துகளை விளையாடி இருப்பார். பிறகு ஷேடோ பேட்டிங் பயிற்சி செய்திருப்பார். மேலும் வலைக்கு வெளியிலும் அவர் பேட்டிங் பயிற்சி செய்திருக்கலாம்.
எப்படி இருந்தாலும் அவரிடம் சிறந்த பேட்டிங் டெக்னிக் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் அவர் கிரீசில் மிகவும் நிதானமாக இருக்கின்ற காரணத்தினால், பந்துகளை அடிக்க அவருடைய கை சரளமாக சிறப்பாக சென்று வருகிறது. அவர் தங்கி இருந்து விளையாடினால் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கிறது. அவர் அப்படியே விளையாடினார். தன்னுடைய இயல்புக்கு உண்மையாக இருந்தார்.
இதையும் படிங்க: 336 ரன்ஸ்.. பாபர் அசாம் மாஸ் கம்பேக்.. சதத்தை தடுத்த ஷாகின் அப்ரிடி.. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கப் 2024
இது அபத்தமான ஒன்று
மேலும் தொடர்ந்து பேசிய ஜான்டி ரோட்ஸ் ” ரோகித் சர்மா இன்னும் அதே போல் பழைய மாதிரியே இருக்கிறார். அவர் கொஞ்சம் கூட மாறவில்லை. இதை நினைத்துப் பார்ப்பதற்கே மிகவும் அபத்தமாக ஆச்சரியமாக இருக்கிறது. அவர் எப்பொழுதும் அணி வீரர்களை சுற்றி இருந்து குறும்புகள் செய்து கொண்டு வேடிக்கையாக இருப்பார். அவரது தலைமையின் கீழ் வீரர்கள் அழுத்தத்தை உணரவே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.