8 விக்கெட்12 ரன்.. அடுத்தடுத்து 2 சிக்ஸ்.. தமிழ்நாட்டில் கலக்கும் இஷான் கிஷான்.. இந்திய அணி வாய்ப்பு பிரகாசம்

0
3322
Ishan

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் ஆண்டுதோறும் நடத்தும் புச்சி பாபு நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேஷ் மோதிய போட்டியில் கேப்டன் இசான் கிஷான் அற்புத ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது மன உளைச்சல் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய இஷான் கிஷான் பிறகு பெரிய பின்னடைவுகளை சந்தித்தார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சம்பள பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களுக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளுக்கு திரும்புவதாக முடிவு செய்தார். இதன்படி தற்போது புச்சி பாபு தொடரில் ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக தமிழ்நாடு வந்திருக்கிறார்.

இந்த வருடம் முதல் போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதிக்கொண்ட போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக கேப்டன் இசான் கிஷான் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 86 பந்துகளில் சதம் அடித்து 107 பந்துகளில் 114 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்கள் டார்கெட் ஜார்கண்ட் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் அணி 163 ரன்கள் எடுத்திருந்தபோது 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது ஒரு முனையில் களத்தில் கேப்டன் இஷான் கிஷான் நின்றது இருந்தார்.

மிகவும் பரபரப்பான இந்த நிலையில் இஷான் கிஷான் எந்தவித பதட்டத்தையும் வெளிப்படுத்தாமல், அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேஷ் அணியை ஜார்க்கண்ட் அணி வீழ்த்த முக்கிய காரணமாக அமைந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க : இந்திய அணிக்காக பசியோட காத்திருக்கேன்.. 10 வருஷமா முடியாத பிசினஸ் அது – ஆஸி நாதன் லயன் பேட்டி

இஷான் கிஷான் இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இன்னொரு இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் வெள்ளைப் பந்து வடிவத்தில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். நேற்று டெல்லி பிரிமியர் லீக்கில் 32 பந்துகளை சந்தித்து 35 ரன்கள் மட்டுமே எடுத்து சுழல் பந்துவீச்சில் மோசமாக தடுமாறினார். இதன் காரணமாக மீண்டும் இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் இஷான் கிஷானுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது!

- Advertisement -