டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பேட்டிங்கை விட தற்போது பந்துவீச்சில் மிக வலுவாக திகழ்ந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் சில போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சே முக்கிய காரணமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜாகீர் கான் ஃபேப் 4 என்று அழைக்கப்படும் சிறந்த நான்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்திருக்கிறார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளக்சர் செயல்பட துவங்கிய காலகட்டத்தில் இருந்து இந்திய அணி வேகப்பந்துவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. பின் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி பதவி ஏற்ற காலத்தில் இருந்து வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட இந்திய அணி உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்து வருகிறது.
இதன் வெளிப்பாடாக இந்தியா கடந்த இரண்டு முறையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. இதைக் குறிப்பிடும் வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஜாகிர் கான் பந்துவீச்சில் தனக்கு சிறந்ததாக கருதப்படும் நான்கு பேரை தேர்வு செய்து இருக்கிறார். அதில் இந்தியாவின் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோரை தவிர தென்னாபிரிக்காவின் ரபாடா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஹேஸில்வுட் ஆகியோரையும் தேர்வு செய்து அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி கடந்த இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இறுதிப்போட்டி வரை வந்து அசத்தியுள்ளது. இந்தியா அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே என்னுடைய ஃபேப் போரில் பும்ரா மற்றும் முகமது சமியை நிச்சயமாக தேர்வு செய்வேன்.
மேலும் அவர்களைத் தவிர தென்னாப்பிரிக்காவின் ரபாடா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஹெசில்வுட் ஆகியோரையும் தேர்வு செய்கிறேன். மேலும் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்சும் இந்த பட்டியலில் ஒருவராக இருக்கிறார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திய நான்கு அல்லது ஐந்து பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான்” என்று குறிப்பிடுகிறார்.
இதையும் படிங்க:கிரீனுக்கு நடந்தது எனக்கு தெரியாது.. திரும்பி வர அவருக்கு தெரியும் – இந்திய தரப்புக்கு ஹெட் சூசக பேச்சு
எனவே இனி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு இனி வருகிற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.