சிஎஸ்கே உடன் ஜடேஜாவுக்கு மீண்டும் பிரச்சனையா? ஜடேஜாவின் லேட்டஸ்ட் ட்விட்டால் வெடித்த சர்ச்சை!

0
4955
Jadeja

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்பொழுது பவுலிங் பேட்டிங் பீல்டிங் என மூன்று என மூன்று பக்கத்திலும் மிக முக்கியமான வீரராக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார்!

கடந்த ஆண்டு அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டு பின்பு அந்த கேப்டன்சி பறிக்கப்பட்டு மகேந்திர சிங் தோனியிடம் மீண்டும் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இது ரவீந்திர ஜடேஜாவை மிகவும் பாதித்த ஒன்றாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே அவர் கடந்த தொடரின் இறுதியிலிருந்து காயத்தின் பெயரில் அணியில் இருந்து விலகிக் கொண்டார் என்று கூறப்பட்டது.

இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ரவீந்திர ஜடேஜாவின் சமூக வலைதள பதிவுகள் அவரது மன வருத்தத்தைக் குறிப்பதாகவே வந்து கொண்டிருந்தது.

பின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அப்படியான பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று தெரிவித்து, இந்த ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வந்தார். இதனால் அந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மகேந்திர சிங் தோனி விளையாட வர வேண்டும் என்பதற்காக ரவீந்திர ஜடேஜா விளையாடும் பொழுது ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகைப் பிடித்தது அவரைப் பாதித்து இருந்தது. இதுகுறித்து ஒருவர் ட்விட்டரில் பதிவிட அதை ரவீந்திர ஜடேஜா லைக் இட்டு தனது மனநிலையைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பதிவில் ” உங்கள் கர்மா உங்களை தேடி நிச்சயம் வரும். அது விரைவாகவோ அல்லது மெதுவாகவோ வரலாம். ஆனால் கண்டிப்பாக வரும்!” என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் மீண்டும் பிரச்சனைகள் வெடித்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. மேலும் நேற்று போட்டி முடிந்ததும் மகேந்திர சிங் தோனி ஜடேஜாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து ரசிகர்கள் அவரை அவுட் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டதும் இதற்குப் பின்னால் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.