“ரோகித் சர்மா தலைமையின் கீழ் நான் ஒரு போட்டியில் ஆவது ஆடி இருக்கக் கூடாதா …? – இர்பான் பதான் ஆதங்கம்!

0
3841

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை ஏற்றி இருக்கிறது . ஒரு பிளே ஆப் போட்டி மற்றும் ஒரு எலிமினேட்டர் முடிவடைந்த நிலையில் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது .

நாளை அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன . இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை அணியுடன் அகமதாபாத்தில் வைத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாடும் .

- Advertisement -

முன்னதாக நேற்று நடைபெற்ற லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை 182 ரன்கள் எடுத்தது ,

இதனைத் தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . மும்பை அணிக்காக பந்து வீசிய இளம் வேகம் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் மிகச் சிறப்பாக பந்து வீசி ஐம்புலன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இதற்கு முன்பு இந்திய அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் களைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . நேற்றைய போட்டியின் மூலம் அந்த சாதனையை ஏற்றி இருக்கிறார் ஆகாஷ் மத்வால் .

நேற்றைய போட்டியில் மும்பை அணியின் பந்து வீச்சு மற்றும் பில்டிங் மிக அருமையாக இருந்தது குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா வீரர்களை கையாண்ட விதம் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று இருக்கிறது . அவரது கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டுறும் தற்போதைய வர்ணனையாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியிருக்கும் அவர் ” நான் ரோகித் சர்மா தலைமையின் கீழ் ஆடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் . அவர் முழுமையான பந்துவீச்சாளர்களுக்கான கேப்டனாக இருக்கிறார் . இளம் வீரர்கள் தவறு செய்தாலும் அவற்றை சுட்டிக்காட்டி அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறார். மேலும் எந்த ஒரு வீரரும் அணுகக் கூடிய வகையில் எளிமையான ஒரு கேப்டனாக செயல்படுகிறார்” என பாராட்டினார்.

மேலும் அவரது தலைமையின் கீழ் நான் ஒரு போட்டியிலாவது ஆடி இருக்கக் கூடாதா என தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். குஜராத் அணியுடன் போட்டியில் பெங்களூர் அணி தோற்றுவாய்ப்பில் தான் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது . ஆனாலும் நேற்று அவர்கள் ஆடிய விதம் முக்கியமான போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளவு ஆபத்தானது என்பதை காட்டும் விதத்தில் இருக்கிறது . நாளை குஜராத் அணிக்கு எதிராக நடைபெறும் குவாலிப்பு போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .