அடுத்த ஆண்டு 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் டிவைன் பிராவோ பொறுப்பேற்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்திருக்கிறது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து டிவைன் பிராவோ ஓய்வு பெற்றார். மும்பை அணிக்காக ஆரம்பித்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி, அந்த அணியின் அடையாள வீரராகவே மாறி ஓய்வு பெற்றார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேகேஆர் மென்டர் வாய்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் டி20 லீக்கில் டிவைன் பிராவோ டிரின் பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு எல்லா வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்.
ஏற்கனவே நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்துக்கு விளையாடி அவர்களுடன் பணியாற்றியதால் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
மேலும் உலகெங்கும் ஐபிஎல் தொடர் இல்லாமல் அமெரிக்கா, சவுதி அரேபியா, வெஸ்ட் இண்டீஸ் என மூன்று நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக பிராவோ இருப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
கேகேஆர் அறிக்கை
இந்த நியமனம் குறித்து கேகேஆர் அறிக்கையில் “பிராவோ எங்களுடன் இணைந்தது ஒரு உற்சாகமான வளர்ச்சியாகும். அவரது பரந்த அனுபவம் மற்றும் ஆழமான அறிவு ஆகியவற்றுடன் வெற்றி பெறுவதற்கான இடைவிடாத அவருடைய உந்துதல், எங்களுடைய உரிமையாளர் மற்றும் அணியின் வீரர்களுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 2 இன்னிங்ஸ் 23 ரன்.. ஏன் அவசரப் படுறீங்க.?. கிங் கோலி கிட்ட தான் அந்த மேட்ச்சுக்கு வரணும் – தினேஷ் கார்த்திக் பதிலடி
டிவைன் பிராவோ கூறும்பொழுது “கரீபியன் லீக் டி20 தொடரில் 10 ஆண்டுகளாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தேன். நைட் ரைடர்ஸ் அணிக்காக பல்வேறு டி20 லீக்குகளில் விளையாடியதால், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதில்எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்று கூறியிருக்கிறார்.