சாய் சுதர்சன் ருதுராஜ் கேப்டன்சியில் துலீப் டிராபி விளையாட மாட்டாரா.. இங்கிலாந்து கவுண்டி தொடரில் விளையாடுகிறாரா?

0
871
Sudharsan

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாடாமல் சாய் சுதர்சன் கவுன்டி கிரிக்கெட்டில் சிக்கிக் கொள்வாரா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

சாய் சுதர்சன் தன்னுடைய பேட்டிங் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவது சிறந்த முடிவாக இருக்கும் என கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே அணிக்கு விளையாடி வருகிறார்.

- Advertisement -

கேப்டன் ருதுராஜ்

இந்த ஆண்டு துலீப் டிராபிக்கு மண்டலங்களின் அடிப்படையில் ஆறு அணிகள் பிரிக்கப்படாமல் ஏ, பி, சி, டி என நான்கு அணிகள் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு அணிகளுக்கும் வரிசைப்படி கேப்டன்களாக சுப்மன் கில் அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் ருதுராஜ் கேப்டனாக இருக்கும் சி அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக சாய் சுதர்சன் இடம் பெற்றிருக்கிறார். இப்படியான நிலையில்தான் ஆகஸ்ட் மாத இறுதியில் கவுன்டி கிரிக்கெட் விளையாட சென்று,செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க இருக்கும் துலீப் டிராபியின் ஆரம்பப் போட்டியில் விளையாடுவதை சாய் சுதர்சன் தவற விடுவாரா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்

சாய் சுதர்சன் இங்கிலாந்து கவுன்டி அணியான சர்ரே அணிக்கு விளையாடுகிறார். இந்த அணிக்கு கடைசி இரண்டு இரண்டு போட்டிகளில் லங்காஷைர் அணிக்கு எதிரான முதல் போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி துவங்க இருக்கிறது. இரண்டாவது போட்டி நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்கு எதிராக ஆகஸ்ட் 29ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 1ம் தேதி முடிவடைகிறது.

இந்த நிலையில் அடுத்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி துலீப் டிராபி ஆந்திர மாநிலம் அனந்தபூர் மைதானங்களில் நடக்க இருக்கிறது. இங்கு விமான நிலையம் கிடையாது. பெங்களூரு அல்லது திருப்பதி விமான நிலையத்தில் இறங்கி தரை வழியாக செல்ல வேண்டும். செப்டம்பர் 1ம் தேதி இங்கிலாந்தில் கவுண்டி போட்டியை முடித்துவிட்டு, செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அணியில் வந்து இணைந்து துலீப் டிராபி விளையாடுவது சாய் சுதர்சனுக்கு மிகவும் கடினம்.

இதையும் படிங்க : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. ரிஷப் பண்ட் அதிரடி சாதனையை முறியடித்த பாக் ரிஸ்வான்.. ஆஸியில் மாறுமா?

தற்போது கவுன்டி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி விளையாடிய 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டியில் டிராவும் 1 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது. இருந்தபோதிலும் சாய் சுதர்சன் மேற்கொண்டு இரண்டு போட்டிகளிலும் கவுண்டி அணிக்கு விளையாடுவார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்திய தேசிய அணிக்கு இடம் பெறுவதற்கு துலீப் டிராபி மிகவும் முக்கியமானது. எனவே சாய் சுதர்சன் துலீப் டிராபியை புறக்கணிக்க மாட்டார். எனவே கவுன்டி கிரிக்கெட் விளையாடி, அடுத்த உடனே அங்கிருந்து கிளம்பி வந்து அவர் ருதுராஜ் தலைமையில் விளையாடுவதும் உறுதியானது. அவர் இரண்டு தொடர்களிலுமே விளையாட இருக்கிறார்.

- Advertisement -