பும்ரா ரிசர்வ் பேங்க் மாதிரி.. அவர் செய்கிற இந்த வேலையை உலகத்தில் வேற யாராலயுமே செய்ய முடியாது – இர்பான் பதான் பேட்டி

0
25
Bumrah

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான அணிக்கு எதிராக பும்ரா நான்கு ஓவர்கள் பந்துவீசி 7 ரன் மட்டுமே விட்டுத் தந்து மூன்று விக்கெட்டை கைப்பற்றினார். ஆப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் கிரிக்கெட்டை கைப்பற்றி போட்டியில் நல்ல துவக்கத்தை பெற வைத்தார். பும்ரா பற்றி இர்பான் பதான் பேசும் பொழுது அவரை இந்திய அணியில் ரிசர்வ் பேங்க் எனக் கூறியிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் குர்பாஸ் அதிரடியாக பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து ஆரம்பித்தார். இதற்கு அடுத்து உள்ளே வந்த பும்ரா உடனடியாக அவர் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார். மேலும் பவர் பிளேவில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அந்த நேரத்தில் நிறைய மெதுவான பந்துகளை வீசினார்.

- Advertisement -

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “பும்ரா இந்திய அணிக்கு ரிசர்வ் பேங்க் மாதிரி. அவர் தன்னுடைய நான்கு ஓவர்களை எப்பொழுது வீசினாலும் பாதுகாப்பானவராக இருக்கிறார். அவர்தான் விளையாட்டை அணிக்காக அமைக்கிறார். அர்ஸ்தீப் சிங் முதல் ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார். அது ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல வேகத்தை கொடுத்தது.

பும்ரா இரண்டாவது ஓவருக்கு உள்ளே வந்தார். வந்தவுடன் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கினார்.அவர் எடுத்த விக்கெட்டுகள் மேலும் அவர் வெவ்வேறு இடங்களில் பந்து வீசியது, மேலும் முதல் ஆறு ஓவரில் மெதுவான பந்துகளை வீசியது என சிறப்பாக அவர் விளையாட்டை செட் செய்தார். உலகத்தில் பும்ராவை தவிர இவ்வளவு அழகாக விளையாட்டை யாராலும் செட் செய்ய முடியாது.

- Advertisement -

பும்ரா சிறப்பானவர் மேலும் அவர் நல்ல லென்த்தில் பந்து வீசுகிறார். அவருடைய பௌலிங் மேப்பை பார்த்தால், நீங்கள் ஒரு கிளஸ்டரை பார்ப்பீர்கள். அதில் மெதுவான பந்துகள் இருக்கும். ஆனால் தேவைப்படும் பொழுது மட்டுமே அவர் பவுன்சரை வீசி இருப்பார்.

இதையும் படிங்க : கில்கிறிஸ்டின் 17 வருட தனித்துவ சாதனை.. ஒரே கம்-பேக்கில் உடைத்து போட்ட ரிஷப் பண்ட்.. புதிய உலக சாதனை

இந்த உலகக் கோப்பையில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பும்ரா பந்து வீச வரும்பொழுது நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங் இருப்பதை பார்ப்பீர்கள். இந்த உலகக் கோப்பையை வெல்ல இது முக்கியமான காரணி. பகலில் விளையாடுவதைப் பற்றி பந்துவீச்சாளர்கள் எந்த குறையும் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்குப் பந்து ஈரம் இல்லாமல் கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -