40 ஓவரில் போட்டியை மாற்றிய ருதுராஜ் அணி.. மீண்டும் களத்தில் சர்பராஸ் கான்.. திரில் நிலையில் இரானி கோப்பை 2024

0
3195
Sarfaraz

உத்தரப் பிரதேஷ் ஏக்னா மைதானத்தில் நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையை இழந்தாலும் ருதுராஜ் அணி போட்டிக்குள் திரும்பி வந்திருக்கிறது

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை மாநில அணிக்கு கேப்டன் ரகானே 97 மற்றும் சப்ராஸ் கான் 222 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, மும்பை அணி 537 ரன்கள் குவித்தது. முகேஷ் குமார் 5 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ருதுராஜ் ஏமாற்றம் – அபிமன்யு ஈஸ்வரன் அபாரம்

இதைத் தொடர்ந்து விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு கேப்டன் ருத்ராஜ் சாய் சுதர்சன் மற்றும் இசான் கிஷான் போன்ற முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தார்கள். ஒரு மனையில் நிலைத்து நின்று விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன் நேற்று 3ஆம் நாள் முடிவில் 151 ரன்கள் குவித்து களத்தில் நின்றார்.

இன்று 4ஆம் நாள் ஆட்டத்தில் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இணைந்து 253 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார்கள். அணியின் ஸ்கோர் 393 ஆக இருந்த பொழுது துருவ் ஜுரல் 97 ரன்னில் துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரனும் 191 ரன்னில் ஆட்டம் இழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 416 ரன்கள் எடுத்து முன்னிலையை தவறவிட்டது. தனுஷ் போட்டியின் மற்றும் சாம்ஸ் முலானி இருவரும் தலா மூன்று விக்கெட் கைபற்றினார்கள்.

- Advertisement -

போட்டிக்குள் நுழைந்த ருதுராஜ் அணி

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்ற மும்பை மாநில அணிக்கு பிரித்திவி ஷா அதிரடியாக விளையாடி 105 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். ஆயுஷ் மாத்ரே 14, ஹர்திக் தாமூர் 7, ரகானே 9, ஸ்ரேயாஸ் 8, சாம்ஸ் முலானி 0 என அடுத்தடுத்து மும்பை அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது.

இதையும் படிங்க : பங்களாதேஷ் டி20.. கில் ஜெய்ஸ்வால் ருதுராஜ் இல்லை.. ஓபனர்கள் யார்? கம்பீர் அதிரடி முடிவு.. முழு அலசல்

இந்த நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் முடிவில் ஆட்டம் இழக்காமல் சர்பராஸ் கான் 8, தனுஷ் கோட்டியன் 20 ரங்களுடன் களத்தில் நிற்கிறார்கள். மும்பை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 274 ரன்கள் முன்னிலையுடன் இருக்கிறது. நாளை சீக்கிரம் மும்பை அணியை ஆல் அவுட் செய்தால், ருத்ராஜ் அணி கடைசி நாளில் 300 ரன்கள் துரத்துவதற்கு அதிரடியாக முயற்சி செய்து பார்க்கலாம். இல்லையென்றால் முதல் இன்னிங்ஸ் முன்னிலைப்படி மும்பை அணி இரானி கோப்பையை வெல்லும்!

- Advertisement -