ஏலத்தில் தேர்வாகாத நான்.. சாம்பியன் பட்டத்தை வென்றேன்.. சும்மா இல்லாமல் பயிற்சி செய்தேன்.. மயங்க் அகர்வால்

0
51

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் மயங்க் அகர்வால், ஏலத்தில் தேர்வு செய்யப்படாமல் போனது முதல் ஐபிஎல் 2025 கோப்பையை வென்றது வரையிலான தனது பயணம் குறித்து திறந்து பேசியுள்ளார். சீசனின் தொடக்கத்தில் எந்த அணியாலும் மயங்க் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும், பின்னர் அவர் ஆர்சிபி அணியில் தேவ்தத் படிக்கலை மாற்று வீரராக இணைந்தார்.

தேவ்தத் காயம் காரணமாக விலகினார். ஏலத்தின் போது அவர் சையது முஷ்தாக் அலி டிராபி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். இது குறித்து பேசிய மயங்ஜ் அகர்வால், “ஐபிஎல் ஏலத்தில் நான் தேர்வாகவில்லை என்பதை நினைவில் கொள்கிறேன். நாங்கள் சையது முஷ்தாக் அலி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம், ஏலத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.”

- Advertisement -

ஏலத்தில் தேர்வாகவில்லை:

“போட்டியின் நடுவே இருந்தோம். அந்த மாலை 6-8 மணி நேரம் எனக்கு கொடுத்துக் கொண்டேன். ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகவில்லை. காரணமாக இது இருக்கலாம் அல்லது அது இருக்கலாம் என்ற எண்ணங்கள் வந்தன. ஆனால் நான் என்னுடன் மிகவும் கடுமையாக நேர்மையாக இருந்தேன், ‘மயங்க், ஆம், நீ தேர்வாகவில்லை.”

“ஆனால் ஏதாவது இருக்க வேண்டும் அல்லது நிச்சயம் வேலை செய்ய வேண்டிய இடங்கள் உள்ளன, அது அடுத்த சீசனில் நம்பை விரும்பும் இடத்தில் இருக்க உதவும். ஆண்டி ப்ளவர் மிகவும் வெளிப்படையாக இருந்தார். நான் ஒரு இக்கட்டான சூழலில் வைக்கப்பட்டேன், நான் ஆட வேண்டியிருந்தது. ஆனால், நான் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் நன்றாக செய்தேன்.”

- Advertisement -

2 பைனலில் விளையாடினேன்:

“ஆர்சிபி உடனான எனது முதல் ஆண்டு 2011. ரே ஜென்னிங்ஸ் பயிற்சியாளராக இருந்தார். 2011ல் சென்னையில் சென்னை உடன் இறுதி ஆடினோம்,.அவர்கள் வென்றனர். எனவே என்னிடமிருந்து சற்று எதிர்பார்ப்பு இருந்தது, நான் இறுதி போட்டியில் ஒரு பகுதியாக இருந்தேன். இந்த இறுதியை ஆடி வெல்ல விரும்புகிறேன். முற்றிலும் நேர்மையாக கூறுகிறேன்.”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு தேவையே இல்லை.. இந்த ஆர்சிபி வீரரை வாங்குங்க – ரசிகர்கள் கோரிக்கை

“நாங்கள் இறுதியை வென்ற போது நிறைய மகிழ்ச்சி, நிறைய உணர்வுகள் என்னால் விவரிக்க முடியாதவை. மயங்க் 2011 சீசனில் ஏழு இன்னிங்ஸில் 141 ரன்கள் எடுத்தார். அவர் 2013 வரை அணியில் இருந்தார்.2025ல் திரும்பினார். பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வீழ்த்தி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த சீசனில்,மயங்க் பைனல் உட்பட நான்கு போட்டிகளில் ஆடினார். மொத்தம் 95 ரன்கள் எடுத்தார்,.சராசரி 31.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 148.43. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உடன் 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் மற்றும் இறுதிப் போட்டியில் 24 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -