தனது கடைசி ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ஜாம்பவான் தோனி விளையாடுகிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்களிடம் விடைபெற தோனி முடிவு எடுத்ததாக தெரிகிறது.
2019 க்குப் பிறகு முதல் முறையாக CSK தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. முதல் சீசனில் இருந்து எஞ்சியிருக்கும் ஒரே வீரர் அவர்தான், ஐபிஎல் முதல் மூன்று சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய மேத்யூ ஹெய்டன்,இது சிஎஸ்கேக்கு சிறப்பான சீசனாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், CSK ஐப் பார்க்கவும், அவர்கள் தனித்துவமான மற்றும் சிறப்பான விஷயங்களைச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். , இரண்டு வருடங்கள் அவர்கள் தடை காரணமாக விளையாடாதது துரதிர்ஷ்டவசமானது.
அதன்பிறகு ஐபிஎல் வெல்வதற்கு அவர்கள் திரும்பி வந்தனர். அவர்களுக்கு என ஒரு வழி இருக்கிறது!” “எம்.எஸ். தோனி சில வீரர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து, அவர்களை தக்கவைத்துக்கொண்டார். எனினும் ஒரே வீரர்கள் இருந்தாலும் அணியை வித்தியாசமாக கட்டமைப்பதில் தோனி வல்லவர்.
இம்முறை கூட புதிய யுத்தியை நிச்சயமாக அவர் கையாளுவார். சிஎஸ்கே எப்படி விளையாடும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவர்கள் கோப்பை வென்ற போது யாரும் அதனை எதிர்பார்க்கவில்லை. மீண்டும் அப்படி ஒரு தருணம் நிச்சயமாக நடைபெறும். எனவே, எம்.எஸ். தோனியைப் பொறுத்தவரை, குறிப்பாக இந்த ஆண்டு, இது வேறு எந்த ஆண்டிலும் கொண்டாடப்படாத ஒரு ஆண்டாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
மேலும் அவர் தனது ரசிகர்கள் முன் ஸ்டைலாக வெளியே செல்ல விரும்புவார். இதனால் எப்போதும் போல் இல்லாமல் இந்த ஆண்டு சிஎஸ்கே ரசிகர்களுக்கானதாக இருக்கும் என்று ஹைடன் கூறியுள்ளார். சிஎஸ்கே அணி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.
இதனால் ரசிகர்கள் இந்த போட்டியை காண மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். மேலும் சேப்பாக்கம் மைதானம் மீண்டும் புனரமைக்கப்பட்டு புதிய பார்வையாளர்கள் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 50,000 ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.