ஆஸியில் இந்திய அணியின் வெற்றி.. இந்த 2 பேட்ஸ்மேன்கள் கையில இருக்கு.. ஆனா பிரச்சனை வேற – முன்னாள் ஆஸி கோச் பேட்டி

0
207
Buchanan

இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றி இரண்டு பேட்ஸ்மேன்கள் கையில் இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கனன் கூறியிருக்கிறார்.

1991-92ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டது.அதற்குப் பிறகு இந்த முறை 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து போட்டிகள் என்பதால் எப்படியும் தொடர் யாருக்கென்று முடிவாகிவிடும்.

- Advertisement -

இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள்

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கனன் கூறும் பொழுது “சுழல் பந்துவீச்சாளர் நாதன்யன் மற்றும் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஆகியோர் துணையுடன் ஆஸ்திரேலியா அணி சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கிறது. இது மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பந்துவீச்சு தாக்குதலாக இருக்கும். இந்தியாவின் டாப் ஆர்டரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நல்ல டோட்டலை கொண்டு வர உதவி செய்ய வேண்டும். இதை வைத்துதான் பும்ரா, சமி, சிராஜ் பந்து வீச முடியும்”

“கடந்த இரண்டு முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற பொழுதும் இடம்பெற்று இருந்த புஜாரா மற்றும் ரகானே இந்த முறை அணியில் இல்லை. ஆனாலும் இரு அணிகளிலும் இடம் பெற்று இருக்கும் வீரர்கள் தங்கள் விரும்பும் நிலையில் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு வீரர்கள் இல்லாதது எந்த பாதிப்பையும் உருவாக்காது”

- Advertisement -

பயிற்சி போட்டி பாதிப்பு

ஆஸ்திரேலியா சொந்த மைதானத்தில் பேட்டிங் செய்யும்பொழுது கண்டிஷனை மிகவும் புரிந்தது மிகவும் சிறப்பான முறையில் செயல்படும்.மேலும் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்ட் வேகப்பந்து வீச்சு தாக்குதல் மற்றும் இவர்களுடன் நாதன் லயன் இருக்கிறார். இந்த பந்துவீச்சாளர்களுக்கு நல்ல அனுபவம் இருந்த போதிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கு இவர்களுடைய உடல் தொடர்ந்து தாக்குப் பிடிக்குமா? என்பது மிக முக்கியமானது

இதையும் படிங்க : அடுத்த ஆஸி சூப்பர் ஸ்டார்.. 26 வயதில் ஓய்வு பெற போகும் சோகம்.. வினோத பின்னணி காரணம்.. வெளியான தகவல்கள்

இந்த தொடரை வெல்ல ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர் விளையாட வரும் அணிகளுக்கு போதிய பயிற்சி போட்டிகள் கிடைப்பதில்லை. குறிப்பாக பெர்த் போன்ற அதிவேகம் மற்றும் பவுன்ஸ் கொண்ட ஆடுகளத்தில் உடனடியாக பேட்ஸ்மேன்கள் தங்களை சரி செய்து கொண்டு விளையாடுவது கடினம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -