இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியில் மூன்று வடிவத்திலும் விளையாடும் ஒரு வீரரின் திறமை குறைவாக மதிப்பிடப்படுகிறது என்றும் அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தியாக இருப்பார் என்றும் கூறியிருக்கிறார்.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் மோதிக் கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி துவங்கி இருக்கிறது. இதில் டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்கள்.
அக்சர் படேல் குல்தீப் யாதவ்
இன்றைய போட்டியில் இந்திய அணியில் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் படேல் மற்றும் மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் இருவருமே வெளியே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். சிவப்பு மண் ஆடுகளம் அமைக்கப்பட்டு வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் என்பதால் மூன்று வேகம் பந்துவீச்சாளர்கள் விளையாடுகிறார்கள்.
பிரதான சூழல் பந்துவீச்சாளர்களாக முதலில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதே சமயத்தில் ரவி சாஸ்திரி தலைமை பேச்சாளராக இருந்த பொழுது இனி வெளிநாடுகளில் முதன்மை சுழல் பந்துவீச்சாளராக நாங்கள் குல்தீப் யாதவையே பார்ப்போம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்கால சக்தி அவர்
இந்த நிலையில் இந்திய அணியின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் திறமையை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றும் அவர் எதிர்காலத்தில் சுழல் பந்து வீச்சில் மிகப்பெரிய சக்தியாக இந்திய அணிக்கு இருக்கப் போகிறார் என்றும் தினேஷ் கார்த்திக் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : 46 அணிகள்.. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. ஆப்கான் வீரர் நபி தனித்துவ சாதனை
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “குல்தீப் யாதவின் திறமையை குறைவாக மதிப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கப் போகிறார். அடுத்தடுத்து இந்திய அணி விளையாட இருக்கும் பத்து டெஸ்ட் போட்டிகளில் அவருடைய பங்கு பெரிதாக இருக்கப்போகிறது. அவரை யாரும் குறைவாக எண்ணி விடாதீர்கள். அவர் ஒரு மேட்ச் வின்னர்” என்று பாராட்டி பேசி இருக்கிறார்.