இந்தியா இதுல வீக்னு நான் எதிர்பார்க்கல.. அதனால முக்கியமா இந்த வேலையை செய்யப் போறேன்.. இந்திய உதவி பயிற்சியாளர் பேட்டி

0
134

இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. இது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை உண்டாக்கியது. சுழலுக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக இருப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சிகளாக திகழும் அயர்லாந்து அணியின் முன்னாள் வீரர் ரியான் டென் டோஸ்கேட் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்தது எதிர்பார்க்காத விஷயம் என்று கூறி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆசிய கண்டங்கள் பொதுவாகவே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணியன் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக வலுவாக திகழ்ந்தனர். ஆனால் சமீப காலங்களில் உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்கள் வெளிநாட்டு ஆடுகளத்தில் நடைபெறுவதால் இந்திய அணி அதில் கவனம் செலுத்தும் விதமாக வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தனது பேட்டிங் வரிசையை பலப்படுத்த முயற்சித்தது.

இதனால் இந்திய அணியின் தற்போதைய வீரர்கள் சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில்லா அப்பட்டமாக தெரிந்தது. இந்திய அணியை பார்க்கும்போது பலம் குறைந்த அணியான இலங்கை அணியிடம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ஆன ரியான் டென் டோஸ்கேட் கூறும்போது “இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது நான் கவனிக்காத சவால்களில் ஒன்றாக இருந்தது. இதனால் நாங்கள் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கைவிடப்பட்டோம். இந்தியா வெளிநாட்டு சூழலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆசையில் இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் எப்படி விளையாடுவது என்று கவனத்தை செலுத்தியது.

இதனால் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. எனவே இந்த விஷயத்தில் நான் உதவியாக இருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக உலகில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறந்தவர்கள் என்ற நிலையை எட்ட உதவுவதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:16/3.. பங்களாதேஷிடம் சிக்கிய பாகிஸ்தான் அணி.. 98 ரன் காப்பாற்றிய துணை கேப்டன்.. முதல் டெஸ்ட்

இந்திய அணியின் சிறந்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சற்று தடுமாறியது தெரிந்தது. இந்த பிரச்சினைகளை விரைவில் சரி செய்து இந்தியா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -