விராட் டீம் தந்த அந்த வலியை மறக்கவே முடியாது.. 2025 தொடர்தான் அவருக்கு கடைசி – ஸ்டூவர்ட் பிராட் பேட்டி

0
217
Broad

2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எவ்வாறான வலியை கொடுத்தது என்பது குறித்து அப்போது இங்கிலாந்து அணியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் கூறியிருக்கிறார்.

இந்தியா அணி 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட விராட் கோலி தலைமையில் சென்றது. அப்போது கொரோனா நேரத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 2-1 எனத் தொடரில் முன்னிலை பெற்று இருந்தது. மேலும் லார்ட்ஸ் டெஸ்டில் விராட் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையில் இந்திய அணி அபாரமான வெற்றி பெற்றது.

- Advertisement -

அடுத்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் சுற்றும் பயணம்

இந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-4 என மோசமாக தோற்று வெளியேறியது. இது தொடர்ந்து இந்திய அணி அடுத்த வருடம் மத்தியில் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசி இருக்கும் ஸ்டுவர்ட் பிராட் கூறும் பொழுது “2021 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்று தொடரை சமன் செய்தது எவ்வளவு காயத்தை எங்களுக்கு உண்டாக்கியது என்பதை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அது ஒரு ஆக்ரோஷமான டெஸ்ட் போட்டி ஆகும். அந்த போட்டியின் கடைசியில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக வறண்ட ஆடுகளத்தில் பந்து வீசினார். அவருக்கு நல்ல மூவ்மெண்ட் கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

2025 தொடரே விராட் கோலிக்கு கடைசி

மேலும் பேசிய ஸ்டுவர்ட் பிராட் கூறும்பொழுது “அது ஒரு அற்புதமான ஆக்ரோஷமான டெஸ்ட் போட்டியாக இருந்தது. அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி இங்கிலாந்து டிரெஸ்ஸிங் ரூமை கடுமையாக காயப்படுத்தியது. அதேபோல அப்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் வந்த விராட் கோலியின் முகத்தில் மகிழ்ச்சியை நாங்கள் பார்த்தோம். அது மிகவும் அர்த்தமுள்ள ஒன்று. நிச்சயமாக அடுத்து நடக்க இருக்கும் டெஸ்ட் தொடர் சிறப்பானதாக அமையும்”

இதையும் படிங்க : ரோகித் இல்ல.. மும்பை அணியில் இவங்க 2 பேருக்குதான் மதிப்பு.. ஹர்திக் தகுதி இல்லாதவர் – டாம் மூடி கருத்து

“இந்திய அணி மிகவும் திறமையான மற்றும் ஆழத்தைக் கொண்டு அணியாக இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணி கொஞ்சம் இளமையாகவும் மற்றும் அனுபவம் குறைவாகவும் இருக்கிறது. ஆனால் நிறைய திறமை கொண்ட பிரண்ட் புட்டில் தைரியமாக விளையாடும் அணியாக இங்கிலாந்து இருக்கும். மேலும் மழை குறுக்கீடுகளால் இந்தத் தொடர் இரண்டுக்கு இரண்டு என்று சமனில் முடியலாம். மேலும் இதுவே விராட் கோலிக்கு கடைசி இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணமாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -