இந்திய அணியில் மிகவும் துரதிஷ்டம் வாய்ந்த வீரராக கருண் நாயர் இருக்கிறார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த பிறகும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மகாராஜா டி20 கிரிக்கெட்டில் அதிரடி சதம் அடித்து இந்திய அணிக்கு திரும்புவதற்கான தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தற்போது 32 வயதாகும் கருண் நாயர் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்தார். வீரேந்திர சேவாக்கு பிறகு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான்.
இருந்த போதிலும் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் இந்திய அணியில் கிடைக்கவில்லை. ரகானே தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்த காரணத்தினால் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து இந்திய அணியில் இருந்தும் நீக்கி விட்டார்கள்.
இந்த நிலையில் நேற்று மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக மகாராஜா டி20 டிராபியில் களம் இறங்கி மங்களூர் டிராகன்ஸ் அணிக்கு எதிராக 48 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 124 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவதே தன்னுடைய கனவு எனக் கூறியிருக்கிறார்.
இது குறித்து கருண் நாயர் கூறும் பொழுது “பொதுவாக வீரர்கள் தங்களுடைய முப்பதாவது வயதில் இருந்து கிரிக்கெட்டில் உச்சம் தொட ஆரம்பிக்கிறார்கள் என்று கூறுவார்கள். என்னுடைய விஷயத்தில் யாருமே இதை நம்புவார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. கடந்த வருடம் மகாராஜா டி20 டிராபிக்கு பிறகு நான் சிறந்த முறையில் விளையாடி வருகிறேன்.
எனக்கு வாய்ப்புகள் கிடைத்தால் அது எங்கு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கிறேன். இதனால் நான் மீண்டும் படிக்கட்டுகளில் ஏற முடியும். நான் விளையாடுவது எந்த போட்டியாக இருந்தாலும் எனக்கு அது முக்கியமான போட்டியாகவே இருக்கிறது. நான் எதையும் வெகு தூரமாக பார்க்க செய்யாமல் இருக்க பழகிக் கொண்டேன்.
இதையும் படிங்க : தெரு கிரிக்கெட்டில் கூட என்னால் தாங்க முடியாது.. டி20 உ.கோ தோல்வி என்னை ரொம்ப வேதனைப்படுத்துச்சு – நஷீம் ஷா பேட்டி
நான் எப்போதும் பேட்டிங் செய்தது போலவே செய்து வருகிறேன். எனக்கு எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வதின் மூலமாக நான் மீண்டும் சிறந்த முறையில் வர முடியும். இதற்காக என்னுடைய தயாரிப்புகள் இருக்கிறது. மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு வர வேண்டும் என்கின்ற உந்துதல்தான் என்னுடைய கனவாக இருக்கிறது. இதுதான் தினமும் காலையில் எழுந்து என்னை ஓட வைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.