நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய தரப்பில் பயணம் செய்திருந்த பத்திரிகையாளர் விமல் குமார் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு இடையே எப்படி சமரசம் உண்டானது என்பது குறித்து கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டதில் நிறைய கருத்து முரண்பாடுகள் இருவருக்கு மட்டும் இல்லாமல் அணி மொத்தத்திலும் இருந்தது. இது டி20 உலகக் கோப்பையிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருவரையும் இணைத்த இந்திய அணி
இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதாப் கான் விக்கெட்டை வீழ்த்தியதும் ரோகித் சர்மா அவரை தூக்கி சுற்றினார். மேலும் இறுதிப்போட்டி இறுதி ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்துவீசி அணியை வெற்றி பெற வைத்ததும், அவருக்கு கன்னத்தில் அன்பாக முத்தம் கொடுத்தார். இதுவெல்லாம் இருவரும் மிகவும் நட்புடன் மீண்டும் இருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுவதாக இருந்தது.
ஆனால் ஆரம்பத்தில் அப்படி இல்லை என இந்திய பத்திரிக்கையாளர் விமல் குமார் கூறியிருக்கிறார். இருவரும் முதல் நாளில் பேசிக் கொள்ளவில்லை என்றும், இரண்டாவது நாளில் கேமரா இல்லாத ஒரு மூலையில் அமர்ந்து இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்றும், இவர்களின் நினைவுக்கு மிக முக்கிய காரணம் ராகுல் டிராவிட் என்றும் விமல் குமார் கூறியிருக்கிறார்.
இரண்டாவது நாள் அதிசயம்
இது குறித்து இந்திய பத்திரிகையாளர் விமல் குமார் கூறும் பொழுது “டி20 உலகக்கோப்பை முதல் நாள் பயிற்சியின் போது ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருமே பேசிக் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அடுத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்று நான் பார்த்த பொழுது இரண்டாவது நாளில் அவர்கள் கேமரா இல்லாத ஒரு மூலையில் அமர்ந்து நீண்ட நேரம் பேசினார்கள். அங்கு எல்லாவற்றுக்கும் முடிவு வந்ததாக நான் உணர்ந்தேன்.
இந்தியாவில் வீரர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் பற்றி மக்கள் நிறைய பேசுவது நடக்கிறது. ஆனால் அடுத்த மூன்று நாட்கள் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்தார்கள். ரோகித் சர்மா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பற்றி ஹர்திக் பாண்டியாவிடம் சுட்டிக்காட்டுவார். அதைப் பார்த்த பொழுது அணிக்குள் எப்படியான நல்ல அதிர்வு இருக்கிறது? என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
இதையும் படிங்க : ஆஸியில் இந்திய அணியின் வெற்றி.. இந்த 2 பேட்ஸ்மேன்கள் கையில இருக்கு.. ஆனா பிரச்சனை வேற – முன்னாள் ஆஸி கோச் பேட்டி
இதற்கான முழு பெருமை முதலில் ராகுல் டிராவிட்டை சேரும். அவர் பெரிய வீரர்களை கையாண்ட விதம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. அவர் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியாவுக்கு இடையில் இருந்த பிரச்சனை என எல்லாவற்றையும் ஒரு மூத்த பயிற்சியாளராக மிகச்சிறப்பாக கையாண்டார்” என்று கூறி இருக்கிறார்.