ரோகித் வாஷிங்டன் சுந்தருக்கு செஞ்சதே போதும்.. அவர மாதிரி தங்கத்தை பார்த்ததில்லை – இந்திய பீல்டிங் கோச் பேச்சு

0
858
Rohit

தற்போது இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தொடர்ந்து வரும் டி.திலீப் இந்தியன் கேப்டன் ரோஹித் சர்மா பற்றி தான் சந்தித்த சில நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர் என கூறியிருக்கிறார்.

இந்திய அணியை ஒருங்கிணைப்பதில் பில்டிங் பயிற்சியாளராக இருந்தாலும் டி.திலீப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த பீல்டருக்கு பதக்கம் வழங்குவதின் மூலமாக, அவர் அணிக்குள் நல்ல கலகலப்பான சூழ்நிலையையும் நல்ல ஒருங்கிணைப்பையும் கொண்டு வருகிறார்.

- Advertisement -

டிராவிட் முதல் கம்பீர் வரை

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் வந்த பொழுது பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் கூட்டிவரப்பட்டார். இந்த நிலையில் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவர் கூட்டி வந்த பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் அணியை விட்டு வெளியேறினார்கள்.

ஆனால் டி.திலீப்பின் மிகச் சிறப்பான செயல்பாடு காரணமாக அவர் தொடர்ந்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் தக்கவைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்படி ஆனவர் என்பது குறித்து மிகவும் வெளிப்படையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சில நல்ல மனிதர்களில் ஒருவர்

ரோகித் சர்மா குறித்து டி.திலீப் கூறும் பொழுது ” ரோஹித் சர்மா பேட்டிங் பற்றி நான் கூற வேண்டிய அவசியம் கிடையாது. உலகின் மிகச்சிறந்த புல் ஷாட் அடிக்கக்கூடியவர்.இதெல்லாம் தாண்டி நான் அவருடன் வேலை செய்யும் போது பார்த்த ஒரு கோணம் இருக்கிறது. ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் அவரை பார்த்திருக்கிறேன். பிறகு இந்திய அணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய நேரம் அவருடன் செலவிட்டு இருக்கிறேன். நான் பார்த்த சில நல்ல மனிதர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர்.

இதற்கடுத்து இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் தனிப்பட்ட ஒவ்வொரு வீரருடனும் ஏற்படுத்தி இருக்கும் உறவு. அதை ஒவ்வொருவருடனும் பேசி அவர் கட்டி எழுப்பிய விதம் அபாரமானது. அவர் களத்தில் மிகவும் வேடிக்கையான நபர். இலங்கைக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் இரண்டு முறை ரன் அப்பை தவறவிட்ட பொழுது அவர் நடந்து கொண்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி ஏதாவது நகைச்சுவையாக பேசி செய்து அணியில் ஒரு நல்ல சூழலை உருவாக்க அவர் எப்பொழுதும் முயற்சி செய்வார்.

இதையும் படிங்க : கபில்தேவை உலகமே சபிக்கும்.. என் மகன் யுவராஜ வெச்சி எனக்கு செஞ்சதுக்கு ஜெயிச்சேன் – யோக்ராஜ் சிங் பேட்டி

இப்படி அவரைப் பற்றி நிறைய வேடிக்கையான சம்பவங்கள் இருக்கிறது. மேலும் அவர் ஒரு சிறந்த கேப்டன் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.அவரிடம் டி20 உலக கோப்பை மற்றும் ஐந்து ஐபிஎல் கோப்பைகள் இருக்கின்றன. ஆனால் இதைத் தாண்டி அவர் மிகவும் சிறந்த மனிதர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -