இந்திய கிரிக்கெட்டில் ஒரு தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு நீண்ட காலமாக பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்த நிலையில் கலீல் அகமத் இதை தீர்த்து வைக்கக் கூடியவராக இருப்பார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சமீபத்தில் நம்புகிறது. இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட்டில் யாரை குருவாக கருதுகிறேன்? என்று கலீல் அகமத் கூறியிருக்கிறார்.
தற்போது 26 வயதாகும் கலீல் அகமத் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய வெள்ளைப் பந்து அணிகளுக்கு அறிமுகம் ஆகிவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவருடைய பந்துவீச்சு சரியான முறையில் இல்லாததால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரைப் பயன்படுத்தி பார்த்த இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் கொண்டுவரப்பட்டு, அவர் தற்போது இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் தன்னை நிரூபிப்பதற்கு வாய்ப்புகள் பெற்று விளையாடுகிறார். இப்படியான நிலையில் மீண்டும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கலீல் அகமத் பக்கமாக திரும்பியிருக்கிறது.
கலீல் அகமத் பந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்ய முடிந்தவர். மேலும் அவரால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீச முடியும். இந்த காரணத்தினால் அர்ஸ்தீப் இருந்தாலுமே கலீல் அகமதையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. அதே சமயத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அர்ஸ்தீப் சிங்கை விட கலீல் அகமதுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கிரிக்கெட்டில் தன்னுடைய குரு யார்? என்று பேசி இருக்கும் கலீல் அகமத் கூறும் பொழுது “நாங்கள் நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, கிரிக்கெட் ரசிகர்கள் மஹி பாய்க்கு மலர் கொத்துகளை கொடுத்தார்கள். ஆனால் அவர் அந்த மலர் கொத்துகளை எல்லாம் எனக்கு அனுப்பினார். இதனால் ரசிகர்கள் சிலர் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இதை என்னால் மறக்க முடியாது.
மஹி பாய் என்னுடைய நண்பர் கிடையாது. மேலும் அவர் என்னுடைய மூத்த சகோதரனும் கிடையாது. ஏனென்றால் நான் அவரை என்னுடைய குருவாகப் பார்க்கிறேன. மேலும் நான் ஜாகிர் கான் இந்திய அணிக்காக முதல் ஓவரை வீசுவதை பார்த்து வளர்ந்தவன். எனக்கும் இந்திய அணிக்காக முதல் ஓவரை வீச வேண்டும் என்ற கனவு இருந்தது.
இதையும் படிங்க : யாரும் எதிர்பார்க்காத வார்த்தையில்.. விராட் கோலிக்கு வாழ்த்து அனுப்பிய ஜெய் ஷா.. ஆச்சரியமான இந்திய ரசிகர்கள்
இப்படியான நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின் போது மஹி பாய் என்னை கூப்பிட்டு முதல் ஓவரை வீசும் படி கூறினார். அந்த நேரத்தில் என்னுடைய கனவு நனவானது. இந்த நிலையில் மஹி பாய் ஏதாவது மனது மாறிவிடக்கூடாது என்று, நான் வேகமாக ஓடி சென்று அந்த ஓவரை பெற்று வேகமாக வீசி முடித்தேன்” என்று கூறியிருக்கிறார்.