வேணும்னா பாருங்க.. யுவராஜ் கைஃப் மாதிரி.. ஆப்கான் அணிக்கு இவங்க 2 பேர் இருப்பாங்க – அஸ்வின் கணிப்பு

0
95

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டித் தொடர் இந்தியாவில் இன்று நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக கருதப்படும் இந்த தொடருக்கு இரண்டு அணி வீரர்களும் தற்போது மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுள்ளது தொடர்ந்து நியூசிலாந்து அணி ஒரே ஒரு போட்டியாக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரலாற்று சிறப்புமிக்கதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த டெஸ்ட் போட்டி நடத்துவதால் இது இந்தியாவின் கிரேட்டர் நொய்டா பகுதியில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறுவதைத் தொடர்ந்து இரண்டு அணிகளுமே தீவிரமாக தயாராகி உள்ளன.

ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு முற்றிலும் பலமாக இருக்கும் நிலையில் அதன் பேட்டிங் மட்டும் நிலைத்தன்மையற்ற பகுதியாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் உள்நாட்டு தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரியாஸ் ஹாசன் மற்றும் பஹிர் ஷா ஆகியோர் இந்தத் தொடரில் இடம் பிடித்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இவர்கள் இருவரையும் இந்தியாவின் யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் ஆகியோரோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும் போது “இந்த ஒரே ஒரு போட்டி தொடர் பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஆப்கானிஸ்தான் அணி பைத்தியக்காரத்தனமாக திறமையான வீரர்களை உருவாக்குகிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு தேவையானது பேட்டிங்கில் ஒரு திடத்தன்மை மற்றும் உறுதி மட்டுமே ஆகும். அவர்களிடம் இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் பேட்டிங்கில் தரமாக இருக்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து பேட்டிங் துறையில் சிறந்து விளங்க, தற்போது அணியில் தேர்வாகி இருக்கும் ரியாஸ் ஹசன் மற்றும் பஹிர் ஷா ஆகியோர் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறேன். இவர்கள் இருவரது உள்நாட்டு பேட்டிங் சராசரி 55 ஆக உள்ளது. இந்தியாவின் வலுவான எதிர்காலத்திற்கான முதல் அறிகுறிகளாக 2000ன் தொடக்கத்தில் யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் ஆகியோர் வந்தனர்.

இதையும் படிங்க:கடைசி தொடரில் இடம்.. ஆனா இந்திய அணியில் இடத்தை இழந்த 5 வீரர்கள்.. பங்களாதேஷ் டெஸ்ட்

அதுபோல ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிர்கால தலைமுறை வீரர்களாக இவர்கள் இருவரும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முன்னோட்டத்தைக்காண இந்தத் தொடரில் விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறுகிறார். சுழற் வந்து வீச்சுக்கு சாதகமான இடத்தில் ஆப்கானிஸ்தான் விளையாடுவதாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னிலை பெற நியூசிலாந்து அணி போராடும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

- Advertisement -