வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி நீண்ட காலம் கழித்து விளையாடுவதால் இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இளம் வீரர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் சீரற்ற செயல்பாடுகளின் காரணமாக சில முன்னணி வீரர்கள் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. அந்த ஐந்து வீரர்கள் குறித்து காணலாம்.
1.முகேஷ் குமார்
ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த முகேஷ் குமார் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் இதுவரை மொத்தமாக ஏழு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இதனால் இவரை அணியிலிருந்து கழட்டி விட முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயால் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
2.ரஜத் பட்டிதார்
ஐபிஎல் தொடர்களில் பங்கு பெற்று சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தரும் ரஜத் பட்டிதார் கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமாகமானார். ஆனால் விளையாடிய 6 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 63 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்த தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் விராட் கோலியும் அணிக்கு திரும்பி உள்ளதால் இவருக்கான இடம் அளிக்கப்படவில்லை.
3.கேஎஸ் பரத்
இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக திகழும் ரிஷப் பண்ட் சமீபத்தில் கார் விபத்தில் காயம் அடைந்து வெளியேறியதால் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியதால் இவருக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்த துருவ் ஜூரேல் சிறப்பாக செயல்பட்டதால் இந்தத் தொடரில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
4.வாஷிங்டன் சுந்தர்
ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற முன்னணி சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் டெஸ்ட் அணியில் இவருக்கான இடம் என்பது நிலையாக இல்லாமல் இருந்தது. சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த போதிலும் ரஞ்சிக் கோப்பை அரையிறுதி போட்டியின்போது வெளியேறினார். பந்துவீச்சாளர்கள் அதிகமாக இருப்பதால் இவருக்கு இடம் வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க:இந்தியாவில் நடக்கும் ஆப்கான் நியூசி டெஸ்ட்.. எப்போது எந்த சேனலில் பார்க்கலாம்.?.. முழு விபரம்
5.தேவ்தத் படிக்கல்
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் படிக்கல் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். மிடில் வரிசையில் களம் இறங்கி 103 பந்துகளில் 65 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தார். இருப்பினும் அனுபவ வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால் இவர் நிலையான இடத்தை பிடிக்க இன்னும் காத்திருக்க வேண்டி உள்ளது.