ஆஸி டெஸ்ட்ல இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க.. அந்த கண்டிஷன்ல பிரமாதமா ஆடுவாரு – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

0
142

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் நட்சத்திரம் சிறப்பாக விளையாடுவார் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சிறப்பாக விளையாடி கைப்பற்றிய இந்திய அணி அதற்குப் பிறகு தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இதற்குப் பிறகு இந்த வருட இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற இளம் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரேல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 190 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரேலின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஜூரேல் இனி வருகிற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவரது பேட்டிங் நுட்பத்தால் சிறப்பாக செயல்படுவார் என்று தீப் தாஸ்குப்தா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “இந்திய லெவனில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக இருப்பார்கள். மூன்றாவது இடத்தில் கில், நான்காவது இடத்தில் விராட் கோலி களமிறங்குவார்கள். ஐந்தாவது கேஎல் ராகுல் மற்றும் ஆறாவது ரிஷப் பண்ட். ஏழாவது இடத்தில் மற்றொரு பேட்ஸ்மேன் விளையாட வைக்கலாம். எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் ஜடேஜா மற்றும் அஸ்வின். அதற்கடுத்த இரண்டு இடங்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் வருவார்கள்.

தாமதமாக நான் கவனித்தது நிறைய பேட்ஸ்மேன்கள் இப்போது வலைகளில் பந்து வீச ஆரம்பித்து விட்டனர். எனவே நீங்கள் விரும்பினால் நான்கு பந்துவீச்சாளர்களோடு செல்லலாம். பகுதி நேர பந்துவீச்சாளரும் சில ஓவர்கள் வீச முடியும். மிடில் வரிசையில் சர்பராஸ் கான் சிறப்பாக இருப்பார் என்று நினைக்கலாம். ஆனால் துருவ் ஜூரேல் நன்றாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ஆமாம் ஜூரேல், ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் என்ற மூன்று விக்கெட் கீப்பர்கள் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதையும் படிங்க:பங்களாதேஷ் எங்ககிட்ட ஜெயிச்சிட்டீங்க.. விராட்கிட்ட மோதுங்க.. இந்த சம்பவம் நடக்கும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேட்டி

இதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடரும் வருவதால் இதை நினைவில் வைக்க வேண்டியதும் அவசியம். ஜுரேல் பேட்டிங் செய்யும் விதம், அவரது நுட்பம் மற்றும் அமைதி போன்றவை புதிய வீரர்களை விட ஆஸ்திரேலியா சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே ஆஸ்திரேலியாவில் திறமையாக செயல்படுவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -