இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நடக்க இருக்கும் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி நான்குக்கு ஒன்று என தோற்றது. தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தினால் விராட் கோலி மொத்தமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணியின் பலம்
தற்போது பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக வெற்றி பெற்றும் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியும் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறது. குறிப்பாக அவர்களுடைய வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் மிடில் வரிசை பேட்டிங் சிறப்பாக அமைந்திருக்கிறது. மேலும் அவர்கள் பாகிஸ்தான் நாட்டில் வைத்து அந்த அணியை வென்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பங்களாதேஷ் அணி இந்த முறை நல்ல விதத்தில் தாக்குதல் தொடுக்கக் கூடிய வேகப் பந்துவீச்சாளர்கள், திறமையுள்ள இளம் துவக்க ஆட்டக்காரர்கள், அனுபவம் வாய்ந்த மிடில் வரிசை ஆட்டக்காரர்கள், அனுபவம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள், திறமையான இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் என முழுமையான அணியாக இந்தியா வரவிருக்கிறது.
பாகிஸ்தான் பசித் அலி கணிப்பு
இந்தியா அடுத்தடுத்து விளையாடும் டெஸ்ட் தொடர்கள் குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் பசித் அலி “இந்திய அணி அடுத்தடுத்து பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி சதம் அடிப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் அந்தச் சதங்கள் 110, 115 என்று சாதாரணமாக இருக்காது. விராட் கோலி இந்த முறை இரட்டை சதங்களை அடிக்கப் போகிறார் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. பும்ரா புறக்கணிப்பு.. பிசிசிஐ துணை கேப்டனை அறிவிக்காதது ஏன்? – வெளியான தகவல்கள்
மேலும் பசித் அலி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய பிளேயிங் லெவன் எதுவென்று கூறியிருக்கிறார். அதில் ரோகித் சர்மா (கே), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.