இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று உத்திர பிரதேஷ் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த இரண்டு முடிவுகள் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னையைப் போலவே போட்டியின் முதல் நாளில் மழை மேகங்கள் சூழ்ந்து குளிராக காணப்படுகிறது.
ஆச்சரியப்படுத்தும் 2 முடிவுகள்
இந்திய அணி டாஸ் என்றால் பேட்டிங் செய்யும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா பந்து வீசுகிறோம் என அறிவித்தார். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அணியில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அதே அணி களமிறங்குகிறது. ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு ஆரம்பத்தில் சாதகங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வகையில் பார்த்தால் ஆஸ்திரேலியாவிற்கு சென்று வேகப்பந்து வீச்சு சாதகமான சூழ்நிலையில் விளையாட, பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை பயிற்சியாக எடுத்துக்கொண்டு உள்ளது போல் தெரிகிறது. இதன் காரணமாகவே கான்பூரில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து களம் இறங்கி ஆச்சரியப்படுத்துகிறது. பங்களாதேஷ் தரப்பில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது
சவால்கள் நிச்சயம் இருக்கும்
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம் ஆடுகளம் கொஞ்சம் மென்மையாகத் தெரிகிறது. நாங்கள் ஆரம்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் எங்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும் உபயோகப்படுத்த வேண்டும்”
நாங்கள் முதல் டெஸ்ட் போட்டியை சரியாக பேட்டிங்கில் ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் கோல் அடிக்க வலியை கண்டுபிடித்தோம். பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்பட்டார்கள். நான் இங்கு வித்தியாசமாக எதையும் எதிர்பார்க்கவில்லை.நாங்கள் சவால் செய்யப்படுவோம் ஆனால் சமாளிக்க அனுபவம் இருக்கிறது அதை அணியுடன் களமிறங்குகிறோம்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்த இந்திய வீரர் டெஸ்ட் பார்மெட்டுக்கு திரும்புனா.. ஆஸில அங்க வெளாடுறப்போ பெரிய ஹெல்ப்பா இருக்கும் – ஹனுமா விகாரி
பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ பேசும் பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய நினைத்தோம். ஒரு பேட்டராக தொடக்கம் கிடைத்தால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். இன்று எங்கள் பேட்ஸ்மேன்கள் அதைச் செய்வார்கள் என்று நினைக்கிறேன். பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாக இருக்கலாம். ஆனால் புதிய பந்தில் சரியாக துவங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.