இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்திய அணியும் அதற்கு தகுந்தவாறு தற்போது தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் வீரரான ஹனுமா விகாரி ஆல் ரவுண்டர்களின் தேவை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை பிரதான நான்கு பத்து வீச்சாளர்களை தாண்டி ஐந்தாவது ஆக ஒரு ஆல்ரவுண்டர் பந்து வீச்சாளரின் தேவை அவசியமாக உள்ளது. ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை நாள் முழுவதும் பந்து வீசும் பந்துவீச்சாளர்களை சோர்வடையாமல் வைத்திருக்க சுழற்சி முறையில் பவுலர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஒரு கேப்டனுக்கு ஏற்படுகிறது. இதனால் ஆல் ரவுண்டரின் தேவை அவசியமான ஒன்றாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டராக ஜடேஜாவை தவிர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என அணியில் யாரும் இல்லை. பந்துவீச்சு ஓரளவு நன்றாக செயல்பட்டு பேட்டிங்கில் தொடர்ச்சியான பங்களிப்பு இல்லாததால் சர்துல் தாக்கூர் இந்திய அணிக்காக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா கடினமாக உழைத்தால் இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் ஒன் தேர்வாக இருப்பார் என்று அனுமா விகாரி கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஹர்திக் பாண்டியா உண்மையில் ஆர்வமாக இருந்தால், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வர வேண்டும் என கடினமாக உழைத்தால் இந்திய அணியின் நம்பர் ஒன் தேர்வாக இருப்பார். ஹர்திக் பாண்டியா உண்மையில் டெஸ்ட் வடிவத்திற்கு திரும்ப ஆர்வமாக இருக்கிறாரா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் மீண்டும் திரும்ப விரும்பும் பட்சத்தில் இந்திய அணிக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் அவரைப் போன்ற ஒரு ஆள் ரவுண்டர் இருந்தால் அது இந்திய அணிக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய வகையில் இருக்கும். குறிப்பாக நாங்கள் ஆஸ்திரேலியாவில் பெர்த் மைதானத்தில் விளையாடினாலோ அல்லது பிங்க் பால் டெஸ்டில் விளையாடும் போது அது இந்திய அணிக்கு பெரிய ஊக்கமாக அமையும். கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் தேவை என்ற பட்சத்தில் பாண்டியாவை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்”என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:கம்பீரும் நானும் சேர்ந்து.. இந்த பேட்ஸ்மேனுக்கு திருப்புமுனையை உண்டாக்காம விடமாட்டோம் – அபிஷேக் நாயர் பேட்டி
சமீபத்தில் காயம் காரணமாக வெளியேறிய ஹர்த்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காகவும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே அதுபோல தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி சிறப்பாக செயல்படுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.