நாளை ஆப்கானுக்கு எதிராக.. இந்திய உத்தேச பிளேயிங் XI.. 2 மாற்றங்களுக்கு ஏற்பட்ட அவசியம்.. ரோகித் முடிவு எடுப்பாரா?

0
1354
ICT

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. நாளை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இந்திய அணியின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, கனடாவுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட, ஏ பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. அமெரிக்க சூழ்நிலைகள் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தன. அடுத்து விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தியத் தேர்வுக்குழு டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்த பொழுது, வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளை மனதில் வைத்து நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தது. சூப்பர் 8 சுற்றில் ஆரம்பித்து வெஸ்ட் இண்டீஸில் விளையாடுவதற்கான அணியை உருவாக்குவதற்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடி வந்தது. தற்பொழுது இதில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் அவருடைய இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியா ஆறாவது பந்துவீச்சாளராக இருக்கின்ற காரணத்தினால், கேப்டன் ரோஹித் சர்மா விரும்பினால் சிவம் துபேவை நீக்கிவிட்டு, அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம். மேலும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாட முடியும் என்பதால், ரிஷப் பண்ட்டை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்தது போல, ஜெய்ஸ்வாலை கூட ஐந்தாவது இடத்தில் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் எடுத்ததும் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் சாகல் விளையாடுவதற்கான வாய்ப்பும் இல்லை

இதையும் படிங்க : திரும்ப 2023 தப்பை செய்ய மாட்டேன்.. இப்ப மாறிட்டேன்.. என் திட்டங்கள் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

டி20 உலகக்கோப்பை சூப்பர் ஹிட் சுற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் சிராஜ்.

- Advertisement -