டி20 உலகக் கோப்பை.. 102 ரன்.. மந்தனா ஹர்மன்பிரித் ஏமாற்றம்.. நியூசியிடம் இந்திய அணி தோல்வி.. அரையிறுதிக்கு சிக்கல்

0
378
ICT

இன்று மகளிர் டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 58 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தற்போது ஐக்கிய அரபு எமிரேடில் நடந்து வரும் மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் முதல் பிரிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன.

- Advertisement -

சோபி டிவைன் கேப்டன் இன்னிங்ஸ்

இந்த போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு துவக்க வீராங்கனைகள் சுசி பேட்ஸ் 24 பந்தில் 27 ரன்கள், பிளிம்மர் 23 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து அமலியா கேர் 22 பந்தில் 13 ரன்கள், ஹல்லிடே 12 பந்தில் பதினாறுடன் எடுத்து வெளியேறினார்கள்.

ஒருமனையில் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் சோபி டிவைன் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உடன் ஆட்டம் இழக்காமல் 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ரேணுகா சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குறித்தது.

- Advertisement -

பவர் பிளேவில் விழுந்த நட்சத்திர வீராங்கனைகள்

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு அதிரடி வீராங்கனை செபாலி வர்மா 4 பந்தில் 2 ரன், ஸ்ருதி மந்தனா 12 பந்தில் 13 ரன், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 14 பந்தில் பதினைந்து ரன்கள் எடுத்து பவர் பிளே முடிவதற்குள்ளாகவே ஆட்டமிழந்து வெளியேறினார்கள். மூன்று நட்சத்திர வீராங்கனைகள் எடுத்ததும் ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

இதையும் படிங்க : மகளிர் டி20 உலக கோப்பை.. ரன் அவுட் தராத நடுவர்கள்.. சர்ச்சையான முடிவு.. இந்திய கேப்டன் பயிற்சியாளர் வாக்குவாதம்

இதைத்தொடர்ந்து ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 11 பந்தில் 13 ரன், ரிச்சா கோஸ் 19 பந்தில் 12 ரன், தீப்தி சர்மா 18 பந்தில் 13 ரன்கள் எடுத்து அடுத்த மூன்று நட்சத்திர வீராங்கனைகளும் வெளியேறினார்கள். இறுதியில் இந்திய அணி 102 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ஓவரில் ஆல் அவுட் ஆகி 58 ரன் வித்தியாசத்தில் தோற்றது. நியூசிலாந்து தரப்பில் ரோஸ்மேரி நான்கு விக்கெட் கைப்பற்றினார். அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பை இந்திய அணி இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -