மகளிர் டி20 உலக கோப்பை.. ரன் அவுட் தராத நடுவர்கள்.. சர்ச்சையான முடிவு.. இந்திய கேப்டன் பயிற்சியாளர் வாக்குவாதம்

0
973
Harman

தற்போது மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் நியூசிலாந்து வீராங்கனையின் ரன் அவுட்டை நடுவர்கள் தராதது விவாதமாகி வருகிறது.

இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து இந்திய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.

- Advertisement -

சர்ச்சைக்குரிய ரன் அவுட் மறுப்பு

இந்த போட்டியில் 14வது ஓவர் என்பது நியூசிலாந்தின் அமலியா கெர் மற்றும் சோபி டிவைன் இருவரும் பேட்டிங்கில் இருந்தார்கள். அந்த ஓவரை இந்தியாவின் சுழல் பந்துவீச்சு வீராங்கனை தீப்தி சர்மா வீசினார். அந்த ஓவரின் ஆறாவது பந்தை அமலியா கெர் அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார்.

இந்த நிலையில் ரன் ஓடிய இரண்டு நியூசிலாந்து வீராங்கனைகளும் அவரவர் இடத்தில் இருந்தார்கள். தீப்தி சர்மா தன்னுடைய தொப்பியை ஓவர் முடிந்ததும் நடுவரிடம் வாங்கிக் கொண்டார். இந்த நிலையில் பந்தை பிடித்து கையில் வைத்திருந்த ஹர்மன்பிரித் கவுர் பந்தை வீசாததால், நியூசிலாந்து வீராங்கனைகள் இரண்டாவது ரன்னுக்கு ஓட, அமலியா கெர் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் நடுவர்கள் அதை ரன் அவுட் ஆக அறிவிக்காதது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

ரன் அவுட்டை மறுத்த காரணம் என்ன?

பதினான்காவது ஓவரின் கடைசி பந்தை தீப்தி சர்மா வீசி முடித்ததும், நியூசிலாந்து வீராங்கனைகள் அந்த பந்தில் ஒருவரின் எடுத்ததும், களத்தில் இருந்த நடுவர் ஓவர் முடிந்தது என்று கூறிவிட்டார். எனவே ஓவர் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்த பிறகு, நியூசிலாந்து வீராங்கனைகள் ரன் ஓடியதால், அதை ரன்னாக எடுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் ரன் அவுட்டும் கொடுக்கவில்லை என்று விளக்கம் கூறப்பட்டது.

இதையும் படிங்க: சூரிய குமாரை கேப்டன் ஆக்கியது எனக்கு ஏமாற்றம்.. ஏன்னா இதுதான் முக்கிய காரணம் – ஹர்பஜன் சிங் வருத்தம்

இதை இந்திய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மற்றும் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் இருவரும் ஏற்காமல் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடுவர்களிடம் பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் துவங்கியது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -