இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியான பேட்டி அணுகுமுறையால் மழையால் பாதிக்கப்பட்ட போட்டிக்கு உயிர் கொடுத்து இருக்கிறது.
கான்பூரில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக முதல் மூன்று நாட்களில் 34 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது. இன்று நான்காவது நாள் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மொமினுல் ஹக் 107* ரன்கள் எடுக்க, பும்ரா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கம்பீர் ரோகித் சர்மாவின் வித்தியாசமான திட்டம்
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டு விட்ட காரணத்தினால் டி20 கிரிக்கெட் போல விளையாடினால் மட்டுமே போட்டிக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில் இதே திட்டத்தை கம்பீர் மற்றும் ரோகித் சர்மா இருவரும் கொண்டு வந்து இந்தியாவின் இன்னிங்ஸை ஆரம்பித்தார்கள்.
இந்திய அணிக்கு வந்த எல்லா பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடினார்கள். ரோகித் சர்மா 11 பந்தில் 23 ரன், ஜெய்ஸ்வால் 51 பந்தில் 72 ரன், சுப்மன் கில் 36 பந்தில் 39 ரன், விராட் கோலி 35 பந்தில் 47 ரன், கேஎல்.ராகுல் 43 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்கள்.
ரோகித் சர்மா அதிரடி டிக்ளர்
இந்த நிலையில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 34.4 ஓவரில் 285 ரன்கள் எடுத்திருந்தபொழுது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக டிக்ளேர் செய்தார். இந்திய 52 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. பங்களாதேஷ் தரப்பில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெகதி ஹசன் மிராஸ் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : கோலி ரோகித் இருக்கட்டும்.. ஆனா பிசிசிஐ இல்லாம இந்திய அணி இத செஞ்சிருக்கவே முடியாது – தமீம் இக்பால் பேட்டி
இன்னும் நாளை முழுதாக போட்டியில் ஒருநாள் இருக்க, பங்களாதேஷ் அணியை 200 ரன்களுக்குள் சுருட்டி, இந்திய அணி 150 ரன்கள் துரத்தி ஜெயிப்பதற்கு திட்டம் தீட்டி இருக்கிறது. மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டும் இந்த போட்டியை இந்திய அணி தற்பொழுது பரபரப்பான கட்டத்திற்கு கொண்டுவந்து அற்புதமான ஆட்டத்தால் நிறுத்தி இருக்கிறது!