வேற மாதிரி.. கேப்டன் கில் பிடித்த அசத்தல் கேட்ச்.. பரிதாபமாக வெளியேறிய ரிஷப் பண்ட்.. துலீப் டிராபி 2024

0
272
Gill

தற்போது ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு துலீப் டிராபி போட்டிகள் நடந்து கொண்டு வருகிறது. இதில் இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் அபாரமான கேட்ச் மூலம் இந்தியா பி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை வெளியேற்றினார்.

2024 ஆம் ஆண்டு துலீப் டிராபிக்கு நான்கு அணிகள் ஏ,பி,சிடி என பிரிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஏ மற்றும் பி அணியும், சி மற்றும் டி அணியும் மோதிக் கொள்ளும் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

வேகப்பந்து வீச்சுக்கு சாதகம்

அடுத்தடுத்து இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய பி அணி பேட்ஸ்மேன்கள் நிறைய தடுமாறினார்கள். எளிதில் ரன் வரவில்லை.

இந்தியா பி அணியில் துவக்க ஆட்டக்காரராக வந்து ஜெய்ஸ்வால் மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 59 பந்துகளுக்கு ஆறு பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த அபிமன்யு ஈஸ்வரன், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் என எல்லோரும் ஏமாற்றம் கொடுத்தார்கள். ஒரு முனையில் சர்ப்ராஸ் கான் தம்பி முசிர் கான் மட்டும் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

மேஜிக் கேட்ச்

சாலை விபத்தில் சிக்கி மீண்டும் வந்திருக்கும் ரிஷப் பண்ட் நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுகிறார் என்கின்ற காரணத்தினால் இந்த போட்டிக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் உள்ளே வந்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அடித்து அசத்தலாக ஆரம்பித்தார். அவர் தடுத்து விளையாடும் பொழுது ஆடுகளம் கடினமாக இருப்பதாகவே தெரியவில்லை.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஏழு ரன்கள் எடுத்திருந்தபோது ஆகாஷ் நேராக தூக்கி அடிக்க முயற்சி செய்தார், பந்து காற்றில் எழும்பி நேராக சென்றது, இந்த நிலையில் மிட் ஆன் திசையில் மிகவும் உள்ளே இருந்த கேப்டன் சுப்மன் கில் பந்தை பிடிக்க திரும்பி முன்னோக்கி ஓடினார். இந்த கோணத்தில் இருந்து ஓடி பந்தை பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று.

இதையும் படிங்க : 2026 டி20 உலக கோப்பை தகுதி சுற்று.. 10 ஓவரில் 10 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன அணி.. மோசமான சாதனை

இந்த நிலையில் பந்தை பார்த்தபடி சரியான திசையில் ஓடி சென்ற கில் பந்தை பிடிக்க முயற்சி செய்த பொழுது பந்து அவரிடம் இருந்து கொஞ்சம் முன்னே விழுவது போல இருந்தது. உடனே சுதாரித்த கில் முன்னோக்கி டைவ் அடித்து அபாரமாக கேட்ச் பிடித்து ரிஷப் பண்ட்டை வெளியேற்றினார். உண்மையில் இந்த மாதிரி ஒரு கேட்ச் எடுப்பது எப்பொழுதாவது மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -