இந்தியாவில் நடைபெற்று வரும் துலீப் ட்ராபி தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா ஏ மற்றும் டி அணிகள் விளையாடின. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஏ அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி அணியை தோற்கடித்துள்ளது.
இதில் இந்தியா ஏ அணியின் பிரதம் சிங் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்தியா ஏ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றனர்.
அனந்தபூரில் நடைபெற்ற இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 84.3 ஓவர்களில் 290 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷாம்ஸ் முலனி 89 ரன்கள் குவித்தார். இந்தியா டி அணித்தரப்பில் பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா 4 விகட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா டி அணியின் 183 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. இதன்படி 107 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரதாப் சிங் 122 ரன்களும் திலக் வர்மா 111 ரன்களும் குவித்தனர். இதனால் இந்தியா ஏ அணி 98 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்தது.
இந்திய டி அணி தோல்வி
இதன்படி 487 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய டி அணியில் தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டைடு டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யாஷ் டூபே 37 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் வெளியேற, மூன்றாவது வரிசையில் களமிறங்கிய புய் நிதானமாக விளையாடி அணியை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு களம் இறங்கிய படிக்கல் ஒரு ரன்னில் வெளியேறினாலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஓரளவு நிதானமாக விளையாடினார்.
ஸ்ரேயஸ் ஐயர் 41 ரன்கள் குவித்து வெளியேற, சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 40 ரன்களில் வெளியேறினார். இதில் மூன்று பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் குறைந்த ரன்களில் வெளியேற புய் மட்டுமே அதிகபட்சமாக 113 ரன்கள் குவித்து டி அணியின் சார்பாக சதம் அடித்து அசத்தினார். இதனால் இந்தியா டி அணி 82.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்து 186 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையும் படிங்க: விராட் ரோகித் கிடையாது.. இப்ப இவர்தான் மதிப்பு மிக்க வீரர்.. நாம சரியான மரியாதை தரல – அஸ்வின் கருத்து
இந்தியா ஏ அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தனுஷ் கோட்டியான் 21 ஓவர்களில் ஏழு ஓவர்கள் மெய்டனுடன் 73 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். மற்றும் மற்றொரு பந்துவீச்சாளர் சம்ஸ் முலானி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் ரியான் பராக் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.