கில் கேப்டனா ஆடிய அணி சாம்பியன்.. சாய் சுதர்சன் தனியாக போராட ருதுராஜ் அணி தோல்வி.. துலீப் டிராபி 2024

0
262
Ruturaj

தற்போது நடந்து முடிந்திருக்கும் துலீப் டிராபி 2024 தொடரில் சாம்பியன் பட்டத்தை மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியை வென்று கைப்பற்றி இருக்கிறது.

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பில் இந்தியா ஏ, பி, சி என மூன்று அணிகளும் போட்டியில் இருந்தன. இந்த நிலையில் இந்தியா பி மற்றும் இந்தியா டி அணிகள் மோதிய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி வென்றதால் இந்தியா பி அணியின் சாம்பியன் பட்ட வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

- Advertisement -

கலக்கிய ஷஸ்வத் ராவத்

இந்த நிலையில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணிக்கு முன்னணி வீரர்கள் ஏமாற்றிய நிலையில் ஷஸ்வத் ராவத் 124 ரன்கள் குவித்தார். பவுலர் ஆவேஸ் கான் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா ஏ அணி 297 ரன்கள் எடுத்தது. வைசாக் விஜயகுமார் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய இந்தியா சி அணிக்கு ருதுராஜ் மற்றும் சாய் சுதர்சன் ஏமாற்ற அபிஷேக் போரல் தாக்குப் பிடித்து விளையாடி 82 ரன்கள் எடுத்தார். இந்தியா சி அணி 234 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆவேஸ் கான் மற்றும் அக்யூப் கான் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

கில் கேப்டனாக அடிய இந்தியா ஏ அணி சாம்பியன்

இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ஏ அணிக்கு ரியான் பராக் 73, ஷஸ்வத் ராவத் 53 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா ஏ அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. கௌரவ் யாதவ் நான்கு விக்கெட் கைப்பற்றினார். 350 ரன்கள் டார்கெட் ஆக வைக்கப்பட்டது.

இதையும் படிங்க : 1972 டென்னிஸ் லில்லி என்கிட்ட சொன்ன அதை.. இப்ப பும்ரா செஞ்சுகிட்டு இருக்காரு – இயான் சேப்பல் வெளியிட்ட தகவல்

இதற்கு அடுத்து விளையாடிய இந்தியா சி அணிக்கு ருதுராஜ் 44, சாய் சுதர்சன் 111 ரன்கள் எடுத்துப் போராடினார்கள். ஆனாலும் 217 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து போட்டியை வென்று மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி துலீப் டிராபி 2024 தொடரில் சாம்பியன் ஆனது. மேலும் இந்த அணிக்கு இந்தத் தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக இருந்தார். அடுத்து பங்களாதேஷ் தொடரில் விளையாடுவதற்காக வெளியேறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -