இந்திய அணி இன்னும் சில மாதங்களில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவின் பணிச்சுமை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
டி20 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கியவர் வேதப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்துவரும் நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரை முக்கியத் தொடர்களில் மட்டுமே பயன்படுத்த முடிவு செய்து டி20 உலக கோப்பைக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிரான போட்டித் தொடரில் சேர்க்காமல் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அவரது பெயரை சேர்த்து இருக்கிறது.
காரணம் வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்திய அணி விளையாட உள்ளதால் அதற்கு தயாராகும் முறையில் ஒரு பயிற்சி போட்டியிடாக இது பும்ராவிற்கு அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் 1972 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் டென்னிஸ் டெல்லி கூறியதை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் பும்ராவின் பணிச்சுமையோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நீண்ட சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில் டென்னிஸ் லில்லியை ஒரு பருத்தி கம்பளியில் வைத்திருப்பதைப் போல பாதுகாப்பாக கையாள்வது அவசியம் என்று கூறி இருந்தேன். அதற்கு லில்லி என்னிடம் ‘நான் ஒரு பேட்ஸ்மேனை போல ஃபார்மில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தும் போது பருத்திக் கம்பளியில் வைத்திருப்பது பற்றி பேசலாம்’ என்று கூறினார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக இந்தியாவின் கட்டமைப்பில் முக்கியமான பகுதியாக இருக்கும் பும்ரா பார்மில் இருப்பதை உறுதி செய்யும், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பெரும் பகுதியில் விளையாடுவதற்கு பும்ரா தயாராக இருக்கிறார். 1972 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி இந்தப் பணியை சமநிலைப்படுத்துவதில் உள்ள சிரமத்தை சரியாகவும் சுருக்கமாகவும் கூறி இருக்கிறார்” என்று கூறினார்.
இதையும் படிங்க:92 வருடம்.. இந்திய அணி முதல் முறையாக புது வரலாறு.. ரோகித் படைக்கு சரித்திர பெருமை.. சென்னையில் சாதனை
எனவே பும்ராவை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயார்படுத்துவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைத்திருப்பதாக தெரிகிறது.