இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் இந்திய வேகம் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பங்களாதேஷ் அணியை கட்டுப்படுத்தி ஆல் அவுட் செய்தார்கள்.
தற்போது கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக முதல் மூன்று நாட்களில் 34 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது. இரண்டு நாட்கள் அடுத்தடுத்து மழையால் ஒரு ஓவர்கள் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நான்காவது நாள் போட்டி திட்டமிட்ட நேரத்தில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
நான்காவது நாள் போட்டி
இன்று போட்டி தொடங்கியதுமே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் முஸ்கி ரஹீம் 11 விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து லிட்டன் தாஸ் விக்கெட்டை 13 முகமது சிராஜ், ஷாகிப் அல் ஹசன் 9 விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கைப்பற்றினார்கள்.
பங்களாதேஷ் அணி மதிய உணவு இடைவேளையின் போது இருநூறு ரண்களை கடந்து ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனவே தொடர்ந்து அடுத்து சீக்கிரத்தில் விக்கெட் கைப்பற்றினால் மட்டுமே, இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் ஏதாவது செய்ய முடியும் என்கின்ற சூழ்நிலை இந்திய அணிக்கு இருந்தது.
மீண்டும் கலக்கிய பும்ரா
இப்படியான நிலையில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த இந்திய அணிக்கு பும்ரா மெகதி ஹசன் மிராஸ் 20, தைஜூல் இஸ்லாம் 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து முகமது சிராஜ் ஹசன் மக்முத் 1, ரவீந்திர ஜடேஜா காலித் அகமத் 0 விக்கெட்டை கைப்பற்ற பங்களாதேஷ் அணி 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய மோமினுல் ஹக் சதம் அடித்து 194 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இந்திய அணியின் தரப்பில் பும்ரா 3, சிராஜ் 2, ஆகாஷ் தீப் 2, அஸ்வின் 1, ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் இதை கட்டாயம் செய்வேன்.. சக பவுலர்களுடன் இந்த 3 விஷயத்தை பேசணும் – பும்ரா பேட்டி
மேலும் இந்த போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றியதின் மூலமாக ரவீந்திர ஜடேஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட் கைப்பற்றினார். இத்துடன் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் 92 வருட வரலாற்றில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல் முறையாக 300 விக்கெட் கைப்பற்றிய முதல் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனையை படைத்தார்.