56 ரன் 2 விக்கெட்.. தமிழகத்தின் இந்திரஜித்.. போராடி ருதுராஜ் அணியை காப்பாற்றினார்.. துலீப் டிராபி 2024

0
257
Ruturaj

தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபியில் இந்திய டி அணிக்கு எதிரான போட்டியில் இந்திய சி அணிக்காக விளையாடிய தமிழகத்தின் பாபா இந்தரஜித் போராடி முன்னிலை பெற வைத்திருக்கிறார்.

நேற்று துவங்கிய இந்த போட்டியில் இந்திய சி அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் டாஸ் வென்று பந்து வீசுவது என முடிவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய டி அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

- Advertisement -

இந்திய டி அணிக்கு போராடிய அக்சர் படேல்

முதலில் பேட்டிங் செய்த இந்திய டி அணி 48 ரன்களுக்கு முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் தனி ஒரு பேட்ஸ்மேன் ஆக நின்று அக்சர் படையில் சிறப்பாக போராடி அணியை ஓரளவுக்கு கௌரவமான ஸ்கோருக்கு மீட்டுக் கொண்டு வந்தார்.

நேற்று அக்சர் படேல் 118 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 100 ரன்களை எட்டுமா என்ற சந்தேகத்தில் இருந்த அணியை 150 ரன்கள் தாண்டி அக்சர் படேல் எடுத்துச் சென்றார். இந்திய சி அணியின் தரப்பில் வைசாக் விஜயகுமார் 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்திய சி அணியை காப்பாற்றிய பாபா இந்திரஜித்

இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்சை விளையாடிய ருதுராஜ் தலைமையிலான இந்திய சி அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய சி அணி 108 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து சிக்கிக் கொண்டது. மேற்கொண்டு 56 ரன்கள் எடுத்தால் இந்திய டி அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்யலாம் என்கின்ற நிலை இருந்தது.

இதையும் படிங்க : ஸ்மித் வில்லியம்சனை விட்ருங்க.. கோலி ரூட் 2 பேர்ல இவர்தான் பெஸ்ட் – அஸ்வின் பேச்சு

இந்திய சி அணிக்கு நெருக்கடியான இந்த சூழ்நிலையில் பாபா இந்திரஜித் தனி ஒரு வீரராக ஒரு முனையில் நின்று போராடி 149 பந்துகளில் 9 பவுண்டரிகள் உடன் 72 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய சி அணி இந்திய டி அணியை தாண்டி நான்கு ரன்கள் முன்னிலை பெற்று 168 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய டி அணியின் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -