தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி அணி அதிரடியாக விளையாடி, ருதுராஜ் தலைமையிலான இந்திய சி அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நேற்று துவங்கிய துலீப் டிராபியின் ஒரு போட்டியில் ருதுராஜ் தலைமையிலான இந்திய சி அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் ருதுராஜ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
போராட்டமான முதல் இன்னிங்ஸ்கள்
முதலில் பேட்டிங் செய்த இந்திய டி அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. அந்த அணி 48 ரன்களில் முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்த நிலையில் அக்சர் படேல் 118 பந்துகளில் 86 ரன்கள் அதிரடியாக எடுத்து அணியை ஓரளவுக்கு காப்பாற்றினார். அந்த அணி இறுதியாக 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கர்நாடக மாநில அணிக்காக விளையாடும் வைசாக் விஜயகுமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா சி அணி 108 ரன்கள் மட்டும் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நேரத்தில் தனியாக போராடிய தமிழக வீரர் பாபா இந்தரஜித் 72 ரன்கள் எடுத்து இந்திய சி அணியை முன்னிலை பெற வைத்தார். அந்த அணி 168 ரன்கள் எடுத்தது. ஹர்ஷித் ராணா 4 விக்கெட் வீழ்த்தினார்.
அதிரடியில் இறங்கிய இந்தியா டி அணி
இந்த நிலையில் வெறும் நான்கு ரன்கள் மட்டும் பின்தங்கி களம் இறங்கிய இந்திய சி அணி, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தடுப்பாட்டம் விளையாடாமல் அதிரடியில் இறங்கி ஆச்சரியப்படுத்தியது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 54 ரன், தேவ்தத் படிக்கல் 91 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 56 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் டீம் கூட ஆடறது வேடிக்கையா இருக்கும்.. வரட்டும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் – ஜெய்ஸ்வால் பேட்டி
அடுத்து வந்த ரிக்கி பூய் 91 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய சி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்திருக்கிறது. மானவ் சுதார் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இத்துடன் 202 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் தடுத்து விளையாடி விக்கெட்டை கொடுப்பதற்கு அதிரடியாக விளையாடி விக்கெட்டை கொடுக்கலாம் என வேறு திட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தியா சி அணி விளையாடுகிறது. தற்பொழுது முன்னிலையும் 200 ரன்களுக்கு மேல் கிடைத்து இருப்பதால், ருதுராஜ் அணி நெருக்கடியில் இருப்பதாகவே தெரிகிறது!