பங்களாதேஷ் டீம் கூட ஆடறது வேடிக்கையா இருக்கும்.. வரட்டும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் – ஜெய்ஸ்வால் பேட்டி

0
195
Jaiswal

இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் அணி இந்த மாதம் வருகிறது. தற்போது இந்த தொடர் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பதாக இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் கூறியிருக்கிறார்.

இந்திய அணி 40 நாளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வில் இருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் உள்நாட்டில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது நாட்டிலும் விளையாடுகிறது.

- Advertisement -

ஃபார்மை தக்க வைப்பது இப்படித்தான்

இது குறித்து பேசி இருக்கும் ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “துலீப் அல்லது ரஞ்சி தொடர்களில் விளையாடுவதற்கான சூழ்நிலை அமையும் பொழுதெல்லாம் அதை நான் மிகவும் சிறந்த வாய்ப்பாகவே பார்க்கிறேன். இதை நான் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. நான் இந்த தொடர்களில் எனது விளையாட்டை மிகவும் ரசித்து விளையாடுவேன் என்று நம்புகிறேன்.

நான் என்னுடைய பேட்டிங் ஃபார்மை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். அதை தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காக நான் செய்து வரும் வேலைகளை தொடர்ந்து செய்கிறேன். என் பயிற்சி மற்றும் தயாரிப்பில் நான் எவ்வளவு சீராக இருக்கிறேனோ அவ்வளவு நல்லரிசல்ட் கிடைக்கும். நான் இதில் ஓவர் திங்கிங் எதுவும் செய்யவில்லை. வழக்கமான வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

பங்களாதேஷ் அணியுடன் விளையாடுவது வேடிக்கையானது

மேலும் ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் காரணமாக ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு போட்டியின் போதும் நீங்கள் உங்களுடைய சிறந்ததை வழங்க உறுதி செய்ய வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு வாய்ப்பும் நம்பமுடியாத அளவுக்கு முக்கியமானது. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு உந்துதலை கொடுக்கிறது.

இதையும் படிங்க : இன்னும் 52 ரன்.. டோட்டல் WTC தொடர்களில் ஜோ ரூட் படைக்க போகும் மெகா சாதனை.. இந்திய வீரர்கள் யாரும் இல்லாத பரிதாபம்

பங்களாதேஷ் அணி தற்பொழுது நன்றாக விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடன் ஒத்துப் போவது வேடிக்கையாக இருக்கும். மேலும் அவர்களுடன் விளையாடுவதும் வேடிக்கையாக இருக்கும். நான் அடுத்து அவர்களுக்கு எதிராக வரவேற்கும் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -